வங்கி மோசடிகளால் மும்பை பங்குச்சந்தை பாதிப்படைந்தது தொடர்ந்து தற்போது மோடி அரசின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பெரிய அளவிலான தாக்கத்தை மும்பை பங்குச்சந்தையில் எதிரொலித்தது.
இன்றைய வர்த்தகச் சரிவிற்கான முக்கியக் காரணங்கள்.
எண்ணெய் நிறுவனங்கள்
கெயில் நிறுவனத்தில் பங்குகளை வாங்கத் திட்டமிட்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பார்த் பெட்ரோலியம் கார்ப் நிறுவனங்கள் திட்டத்தில் இருந்து பின்வாங்கிய காரணத்தால் இன்று எண்ணெய் நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
தென்னிந்திய மாநிலங்கள்
இதுமட்டும் அல்லாமல் ஆந்திர மாநிலத்துடன் தென்னிந்திய மாநிலங்கள் இணைந்து மோடி அரசின் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
நம்பிக்கையில்லா தீர்மான
நாடாளுமன்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. இதன் எதிரொலியா இன்றைய வர்த்தகத்தில் மந்தமான வர்த்தகம் நிலவியது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 252.88 புள்ளிகள் சரிந்து 32,923.12 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 100.90 புள்ளிகள் சரிந்து 10,094.25 புள்ளிகளை அடைந்தது.