ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபினான்ஸ் கார்ப் எனப்படும் எச்டிஎப்சி இந்தியாவின் மிகப் பெரிய வீடு கடன் போன்ற அடமான கடன் வழங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனமானது முதன் முறையாகக் கடன் வட்டி விகிதத்தினை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 2013 டிசம்பர் மாதத்திற்குப் பிறகு முதன் முறையாக 0.20 சதவீதம் வரை வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளத
வட்டி விகித உயர்வு
30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக அடமான கடன் வாங்கினால் 0.20 சதவீதமும், 30 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வீட்டு கடன் வாங்கினால் 0.05 சதவீதமும் உயர்த்துவதாகத் தெரிவித்துள்ளது.
வீட்டு கடன்
30 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டு கடன் மீதான வட்டி விகிதமானது 8.40 சதவீதத்தில் இருந்து 8.60 சதவீதமாக உயருகிறது. 75 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வீட்டு கடன் மீதான வட்டி விகிதம் 8.50 சதவீதத்தில் இருந்து 8.70 சதவீதமாக உயருகிறது.
ரூ.30 லட்சம் வரையிலான கடன்
இதுவே வீட்டு கடன் தொகையானது 30 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் போது 8.40 சதவீதமாக இருந்த வீட்டு கடன் மீதான வட்டி விகிதமானது 8.45 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. பெண்களுக்கு அனைத்துத் திட்டங்களிலும் 0.05 சதவீதம் வட்டி விதம் குறைவாக இருக்கும்.
பிரதான கடன் விகிதம்
எச்டிஎப்சி வங்கியில் 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதான கடன் விகிதம் 16.15 சதவீதத்தில் இருந்து 16.75 சதவீதமாக உயர்ந்தது. அதுவே தற்போது ஏப்ரல் 1 முதல் 16.35 சதவீதமாக உயருகிறது.
அரசு பத்திரங்கள் மீதான வருவாய்
ஜூலை 2017 மற்றும் தற்போது 10 வருட அரசு பத்திரங்கள் மீதான வருவாய் உயர்ந்துள்ளது. ஆனால் பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை வருவாய்ச் சரிந்தது இருந்தாலும் அவை இன்னும் அதிகமாக உள்ளது.