ஏர்செல்-ன் முன்னால் தலைவர் சி சிவசங்கரன் நிறுவனங்கள் மீது ரூ.600 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு பதிவு!

திவால் ஆன ஏர்செல் நிறுவனத்தின் முன்னால் தலைவரான சி சிவசங்கரனின் அக்செல் சன்ஷைன் லிமிடெட் மற்றும் ஃபின்லாந்து சார்ந்த வின் விண்ட் ஓய் நிறுவனங்கள் ஐடிபிஐ வங்கியில் 600 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகச் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

சோதனை

சோதனை

சிபிஐ இந்த வழக்கு தொடர்பாக முன்னால் ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் அலுவலகங்கள் மற்றும் சிவசங்கரனின் நிறுவனங்கள் என 50 இடங்களில் சோதனை செய்து வருகிறது.

சோதனை நடைபெறும் இடங்கள்

சோதனை நடைபெறும் இடங்கள்

சென்னை, டெல்லி, மும்பை, ஃபரிதாபாத், காந்திநகர், பெங்களூரு, பெல்காம், ஹைதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் புனே ஆகிய நகரங்களில் சிபிஐ தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

கடன்

கடன்

2014--ம் ஆண்டு ஐடிபிஐ வங்கியில் 530 கோடி ரூபாய் சிவசங்கரன் கடனாகப் பெற்றதாகவும் அது தப்போது வரை வாரா கடனாக உள்ளது என்றும் சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.

என்ன பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது?

என்ன பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது?

சிபிஐ குற்றவியல் சதி, ஏமாற்றுதல் மற்றும் ஊழல் என்ற பிரிவுகளின் கீழ் அக்செல் சன்ஷைன் லிமிடெட் மற்றும் ஃபின்லாந்து சார்ந்த வின் விண்ட் ஓய் ஆகிய இரன்உ நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் சிவசங்கரன் எங்கு உள்ளார் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+