வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இலவச வங்கி சேவைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அன்மையில் மத்திய அரசு வங்கிகளிடம் இலவச சேவைகளுக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பியதால் அதற்கான வரியை வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் வசூலிக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு இந்த விளக்கத்தினை அளித்துள்ளது.
ஜிஎஸ்டி
மறைமுக வரி வாரியனமான சரக்கு மற்றும் சேவை வரிப் பிரிவு 2012-ம் ஆண்டு முதல் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளித்த வந்த இலவச சேவைகளுக்கு வரியினைச் செலுத்த வேண்டும் நோட்டிஸ்-ஐ மே மாதம் அனுப்பி இருந்தது.
மத்திய அரசு விளக்கம்
எந்தவொரு சார்பற்ற பெறுநருக்கு அல்லது சம்பந்தப்பட்ட அல்லது வேறுபட்ட நபரைத் தவிர வேறு ஒரு நபர் கருதி இல்லாமல் சப்ளையர் வழங்கிய சேவைகளுக்கு ஜிஎஸ்டி பொருந்தாது என்றும் ஆவணத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
கூடுதல் விளக்கம் தேவை எனக் கோரிக்கை
வங்கிகள் வரி செலுத்த வேண்டும் மத்திய அரசு அனுப்பிய நோட்டிஸில் குழப்பம் உள்ள நிலையில் சேவை வரிச் சட்டத்தில் உள்ள சந்தேகங்களை ஆராய்ந்து மேலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
செய்திகள்
மத்திய அரசு வங்கிகளுக்கு அனுப்பிய நோட்டிஸ் படி 45,000 ரூபாய் வாரை வங்கிகளுக்குக் கூடுதல் செலவாகும் என்றும் அது மக்களிடம் தான் வசூலிக்கப்படும் செய்திகள் வெளியிடப்பட்டது.
தற்போது ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் சேவைகள்
அதே நேரம் இலவச பரிவர்த்தனை இல்லாமல் கூடுதலாகப் பரிவர்த்தனை செய்யும் போது அதற்கு விதிக்கப்படும் கட்டணங்களுக்கு வங்கிகள் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இதற்காக ஜிஎஸ்டி கட்டணங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது.
இது போன்று கிரெடிட் கார்டு பில் கட்டணத்திற்கும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஆனால் இலவச செக் புக் சேவைகளுக்கு ஜிஎஸ்டி செலுத்த தேவையில்லை.
குழப்பங்களுக்கான தீர்வு
அது மட்டும் இல்லாமல் வங்கி சேவையினைப் பல வகையில் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஜிஎஸ்ட் கட்டணம் குறித்துப் பல சந்தேகங்கள் உள்ள நிலையில் இவற்றைப் பற்றி மத்திய அரசும் வங்கி நிர்வாகமும் தான் விளக்க வேண்டும்.