இன்று (03/07/2018) பங்கு சந்தையில் மும்பை பங்கு சந்தை குறியீடான் சென்செக்ஸ் 114.19 புள்ளி என 0.32 சதவீதம் உயர்ந்து 35,578.60 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 42.60 புள்ளிகள் என 0.40 சதவீதம் உயர்ந்து 10,699.90 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
அமெரிக்கா, சீனா இடையில் வர்த்தகப் போர் நடைபெற்று வரும் நிலையில் ஆட்டோமொபைல், ஐடி மற்றும் பார்மா நிறுவனப் பங்குகள் இன்று லாபத்தினை அளித்துள்ளன. சவுதி அரேபியா உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கூடுதலான உற்பத்தியினைச் செய்ய முடிவு செய்துள்ளதால் வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புகள் உள்ளது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்த இருந்ததில் இருந்து மீண்டு வருகிறது. அதே நேரம் உள்ளூர் முதலீட்டாளர்கள் 366.94 கோடி ரூபாய்க்குப் பங்குகளை வாங்கியுள்ளனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திங்கட்கிழமை 1,205.12 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
துறை வாரியான விவரங்கள்
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் ஹெல்த்கேர், ஐடி, ஆட்டோமொபைல், டேக், எண்ணெய் மற்றும் ஆற்றல் துறை பங்குகள் லாபம் அளித்து இருந்த அதே நேரம் மெட்டல், வங்கி, நுகர்வோர் சாதனங்கள்
மற்றும் நிதி துறை பங்குகள் சரிந்து இருந்தன.
லாபம் அளித்த நிறுவனங்கள்
சன் பார்மா, மாருதி, இன்ஃபோசிஸ் லூபின் மற்றும் ஓஎன்ஜிசி பங்குகள் பாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
வேதாந்தா, ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், எச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ பங்குகள் நட்டம் அளித்துள்ளன.