சரக்கு மற்றும் சேவை வரியான ஜிட்ஸ்டி அமலுக்கு வந்து ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில் ஜிஎஸ்டி தொழில்நுட்பம் தோல்வி அடைந்துள்ளதை நிதி அமைச்சா செயலாளரான ஹஸ்முக் ஆதியா ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜிஎஸ்டி தொழில்நுட்பத்தினை சிறப்பாக செயல்படுத்த கடினமாக உழைத்து வரும் நிலையிலும் அது சில நேரங்களில் தோல்வி அடைந்தே வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்போசிஸ்
ஜிஎஸ்டி தொழில்நுட்பத்தினை இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் உருவாக்கியது மட்டும் இல்லாமல் புதுப்பித்து மெறுகேற்றும் பணிகளையும் செய்து வருகிறது.
ஜிஎஸ்டிஎன்
இன்போசிஸ் உருவாக்கிய ஜிஎஸ்டிஎன் பயன்பாட்டின் கீழ் தான் ஜிஎஸ்டிஎன் பதிவு, ரசீதுகள் பதிவேற்றுவது, வரி தாக்கல் மற்றும் பணம் செலுத்துவது போன்ற சரக்கு மற்றும் சேவை வரியின் அனைத்து செயல்பாடுகள் இயங்கி வருகிறது.
ஏன் தோல்வி
ஜிஎஸ்டி வரி ஆட்சி முறையினை குறைந்த காலகட்டத்திற்குள் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இருந்து, எனவே தொழில்நுட்பத்தினை முழுமையாகத் தயார் செய்வதற்கான நேரம் போதுமானதாக இல்லை எனவே தான் இந்தத் தோல்விகள் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி தொழில்நுட்பத்தினை உருவாக்கும் பணிகளில் அற்புதமான நபர்கள் எல்லாம் செயல்பட்டு வரும் நிலையில் அவர்களது முயற்சிகள் இன்று வரை தோல்வியிலேயே முடிந்து வருகிறது என்றும் நிதி அமைச்சக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எளிமை
ஜிஎஸ்டி வரி முறையினை தொழில்நுட்பங்கள் மூலம் மிகப் பெரிய அளவில் எளிமைப்படுத்த முடியும். தற்போது பல வகையில் அதனை எளிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அதில் மேலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியதும் உள்ளது.
வணிகங்கள் பாதிப்பு
2017 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்து ஒரு வருடம் முடிவடைந்த நிலையிலும் 50 சதவீத வணிக நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பவில்லை என்று ஆய்வு அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஜிஎஸ்டி வந்த பிறகு வேலைகள் கூடியுள்ளது மற்றும் அதிக நேரம் செலவாகிறது என்றும் பல வணிகங்கள் கூறுகின்றனர்.
எதிர்பார்ப்பு
ஜிஎஸ்டி-ல் இன்னும் சிக்கல்கள் இருந்தாலும் வெற்றிகரமாக 2 வது ஆண்டில் நுழைந்துள்ள நிலையில் விரைவில் ஒற்றை வரி தாக்கல் போன்ற எளிமைப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தும் என்று வணிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறனர்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications