சரக்கு மற்றும் சேவை அமைப்பின் அடுத்தக் கூட்டம் வருகிற ஜூலை 21ஆம் தேதி நடைபெறுகிறது, ஏற்கனவே ஜிஎஸ்டி வருவாய் அதிகளவில் பாதிப்படைந்திருக்கும் சூழ்நிலையில் நாட்டின் வர்த்தகத்தை மேம்படுத்த முக்கியமான பொருட்களுக்கு அதிகளவிலான வரியைக் குறைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் சேனிட்ரடி நேப்கின்ஸ், கைவினை பொருட்கள், கைத்தறி ஆடைகள் மீதான வரி குறைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதில் சில சேவைகளும் சேரும் எனவும் தெரிகிறது.
இதுமட்டும் அல்லாமல் பல துறை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பல்வேறு கோரிக்கையை வைத்துள்ள நிலையில், இந்தப் பிரிந்துரையையும் ஆய்வு செய்து அதற்கான முடிவுகளை ஜிஎஸ்டி அமைப்பு முடிவு எடுக்க உள்ளது.
2017, ஜூலை 1ஆம் தேதி ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.