கோச்சடையான் திரைப்படத்திற்குக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற வழக்கில் லதா ரஜினிகாந்த் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையினை ரத்துச் செய்ய முடியாது என்றும் விசாரணைகளுக்கு ஆஜர் ஆக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோச்சடையான் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக லதா ரஜினிகாந்த் இயக்குநராக இருக்கும் மீடியா ஒன் குலோபள் எண்டர்டெயின்மெட் லிமிடட் நிறுவனம் ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்திடம் இருந்து 14.90 கோடி ரூபாயினைக் கடனாகப் பெற்றது. அதில் தற்போது வரை 6.20 கோடி ரூபாயினை மீடியா ஒன் திருப்பிச் செலுத்தவில்லை.
ஆட் பியூரோ
ஆட் பியூரோ நிறுவனமானது மிடியா ஒன் நிறுவனத்தில் லதா ரஜிகாந்தும் ஒரு இயக்குனர் என்பதால் அந்தக் கடனிற்காகப் பொறுப்பினை அவர் ஏற்றுக் கடனை அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வாதாடியுள்ளது.
லதா ரஜினிகாந்த்
ஆனால் லதா ரஜினிகாந்த மீடியா ஒன் நிறுவனத்திற்கு எனக்கும் எந்தச் சமந்தமும் இல்லை என்று கூறிவருகிறார். தற்போது இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை மீதான விசாரணையினை மீண்டும் தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
பிப்ரவரி மாதமே உச்ச நீதிமன்றம் மீடியா ஒன் நிறுவனம் 6.20 கோடி ரூபாயினை ஆட் பியூரோ நிறுவனத்திற்கு 12 வாரங்களில் செலுத்த வேண்டும் என்றும், லதா ரஜினிகாந்த் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் உத்தரவிட்டு இருந்தது.
தீர்ப்பை மதிக்காத லதா ரஜிகாந்த்
லதா ரஜிகாந்த் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மதிப்புக் கடனை அடைக்காததால் ஜூலை 3-ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஜூலை 10-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கோச்சடையான்
கோச்சடையான் திரைப்படம் 2014-ம் ஆண்டுச் சவுதர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியானது. ஒளிச்சேர்க்கை பிடிப்புத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தினை எடுக்க 1.25 கோடி ரூபாய் மட்டுமே செலவானது என்றும் கிராப்பிக்ஸ், வெளியீடு மற்றும் விளம்பரத்திற்காகத் தான் 14.90 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications