ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் 2000 கிரெடிட் கார்டு உரிமையாளர்களைப் போலி கால் சென்டர் வாயிலாக ஏமாற்றிச் சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
இந்த மோசடிக்குத் தொடர்புடைய 22 கால் சென்டர் அதிகாரிகள் உட்பட 30 பேரை டெல்லி சைபராபாத் போலீஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கிரெடிட் கார்டு
எஸ்பிஐ கிரெடிட் கார்டு பிரிவு அதிகாரி என வாடிக்கையாளர்களுக்கு அழைத்து, அவர்களுடைய கார்டு தகவல்களைச் சேகரித்து ஆன்லைன் போர்டல் வழியாகப் பணத்தைத் திருடியுள்ளனர் எனச் சைபராபாத் போலீஸ் கமிஷ்னர் வி.சி.ஷாஜ்ஜானார் தெரிவித்துள்ளார்.
விஜய் குமார் சர்மா
இந்த 5 கோடி ரூபாய் மோசடிக்குத் தலைவராக விஜய் குமார் சர்மா என்பவர் இருந்து மொத்தம் 29 பேரை வழிநடத்தியுள்ளார். தற்போது விஜய் குமாரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கால் சென்டர் ஊழியர்கள்
கைது செய்யப்பட்ட 22 கால் சென்டர் ஊழியர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் விஜய் குமார் சர்மா-வின் கட்டளையின் அடிப்படையில் இயங்கியதும் குறிப்பிடத்தக்கது.
பணப் பரிமாற்றம்
மேலும் பணப் பரிமாற்றம் அனைத்தும் www.jayyshree.com என்னும் இணையத் தளம் வாயிலாகச் செய்யப்பட்டுள்ளது என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளது.