வங்கி அதிகாரிகள் கடன் அளித்தது மட்டும் இல்லாமல் அவற்றுக்கான கால அளவை நீட்டித்துக்கொண்டே சென்று அவை இன்று வாரா கடனாக வளர்ந்துள்ளது எனப் பல வங்கிகளின் முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணை வலையில் உள்ளனர்.
கடந்த 4 மாதங்களில் மட்டும் அமலாக்கத் துறை 50-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகளைக் கைது செய்துள்ளது. வங்கி பொது மேலாளர்கள் மற்றும் அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் தான் இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதிகளவில் தொடர்புடையவர்களாக உள்ளதாகவும் சிபிஐ கூறுகின்றது.
வங்கி தலைவர்கள் மற்றும் இயக்குனர்கள்
வங்கிகளில் கடன் மோசடிகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்களில் 9 நபர்களது வங்கியின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் ஆவார். அது மட்டும் இல்லாமல் இந்தப் பட்டியலில் முன்னாள் ஆர்பிஐ ஊழியர்களுக்கும் தொடர்புடையதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
பொதுத் துறை வங்கி
2014-2015 மற்றும் 2016-2017 நிதி ஆண்டில் பொதுத் துறை வங்கிகளில் மட்டும் 8,622 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 1,146 வழக்குகளில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்புள்ளது என்று கூறப்படுகிறது.
தனியார் வங்கி
அதே காலக் கட்டத்தில் தனியார் வங்கிகளில் 4,156 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 568 வழக்குகள் வங்கி ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நீரவ் மோடி செய்த மோசடிகள் வெளிவந்த பிறகு மட்டும் வங்கி ஊழியர்களை அமலாக்கத் துறை கைது செய்வது என்பது 5 மடங்கு அதிகரித்துள்ளது. நீரவ் மோடி வழக்கில் பிஎன்பி வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனருக்கும் தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ
தற்போது சிபிஐ 44 பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளில் 292 வழக்குகளைப் பதிவு செய்து மோசடிகள் குறித்து விசாரித்து வருகிறது. அதில் 10 வழக்குகள் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்த வழக்குகள் ஆகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications