வங்கி அதிகாரிகள் கடன் அளித்தது மட்டும் இல்லாமல் அவற்றுக்கான கால அளவை நீட்டித்துக்கொண்டே சென்று அவை இன்று வாரா கடனாக வளர்ந்துள்ளது எனப் பல வங்கிகளின் முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணை வலையில் உள்ளனர்.
கடந்த 4 மாதங்களில் மட்டும் அமலாக்கத் துறை 50-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகளைக் கைது செய்துள்ளது. வங்கி பொது மேலாளர்கள் மற்றும் அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் தான் இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதிகளவில் தொடர்புடையவர்களாக உள்ளதாகவும் சிபிஐ கூறுகின்றது.
வங்கி தலைவர்கள் மற்றும் இயக்குனர்கள்
வங்கிகளில் கடன் மோசடிகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்களில் 9 நபர்களது வங்கியின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் ஆவார். அது மட்டும் இல்லாமல் இந்தப் பட்டியலில் முன்னாள் ஆர்பிஐ ஊழியர்களுக்கும் தொடர்புடையதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
பொதுத் துறை வங்கி
2014-2015 மற்றும் 2016-2017 நிதி ஆண்டில் பொதுத் துறை வங்கிகளில் மட்டும் 8,622 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 1,146 வழக்குகளில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்புள்ளது என்று கூறப்படுகிறது.
தனியார் வங்கி
அதே காலக் கட்டத்தில் தனியார் வங்கிகளில் 4,156 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 568 வழக்குகள் வங்கி ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நீரவ் மோடி செய்த மோசடிகள் வெளிவந்த பிறகு மட்டும் வங்கி ஊழியர்களை அமலாக்கத் துறை கைது செய்வது என்பது 5 மடங்கு அதிகரித்துள்ளது. நீரவ் மோடி வழக்கில் பிஎன்பி வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனருக்கும் தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ
தற்போது சிபிஐ 44 பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளில் 292 வழக்குகளைப் பதிவு செய்து மோசடிகள் குறித்து விசாரித்து வருகிறது. அதில் 10 வழக்குகள் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்த வழக்குகள் ஆகும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications