ஆதார் தரவுகள் மீதான கவலைகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் தேசிய கொடுப்பனுவுகள் நிறுவனம் யூபிஐ, ஐஎம்பிஎஸ் சேவைகளில் ஆதார் எண் பயன்படுத்திப் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையினை நீக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தேசிய கொடுப்பனுவுகள் நிறுவனம் அனைத்து வங்கிகளுக்கும் ஜூலை 17-ம் தேதி அனுப்பிய அறிவிப்பில் ஆதார் எண் ஒரு முக்கியமான தகவல், அதன் மீது பல திருத்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
வழிகாட்டும் குழு
ஆதார் எண் பரிவர்த்தனை முறையினை யூபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் சேவைகளில் இருந்து நீக்கும் முன்பு ஜூலை 5-ம் தேதி வழிகாட்டும் குழுவுடன் இது குறித்து ஆலோசனையும் நடைபெற்றுள்ளது.
வழிகாட்டும் குழுவில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), எச்டிப்சி வங்கி, சிட்டி வங்கி, மகாராஷ்டிரா கிராமின் வங்கி, ஒன் மொபி குவிக் சிஸ்டம்ல், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உள்ளிட்ட 18 வங்கி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லா நிறுவனங்கள் உள்ளன.
கூடுதல் பணப் பரிவர்த்தனை சேவை
அதார் எண் மூலம் பரிவர்த்தனை செய்யும் முறையானது யூபிஐ அல்லது ஐஎம்பிஎஸ் தொழில்நுட்பத்தில் அளிக்கப்பட்டும் கூடுதல் பணப் பரிவர்த்தனைக்கான வழியாகும். இதன் மூலம் பணம் அளிக்க வேண்டிய வங்கி கணக்கு பயனரின் ஆதார் எண்ணை உள்ளிட்டுப் பரிவர்த்தனை செய்யும் தொகையினை உள்ளிட்டு எளிதாகப் பணத்தினைப் பிறர் வங்கி கணக்கு அனுப்ப முடியும்.
ஆதார் பணப் பரிவர்த்தனை
ஆதார் எண்ணை உள்ளிட்டு இது போன்று பரிவர்த்தனை செய்யும்போது பெறும் பாலும் கடைசியாக எந்த வங்கி கணக்கில் நாம் ஆதார் எண்ணை இணைத்தோமோ அந்த வங்கி கணக்கிற்குத் தான் பணம் செல்லும்.
எப்போது ஆதார் சேவை நீக்கப்படும்?
ஆதார் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யக் கூடிய இந்த யூபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் சேவைகளை 2018 ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் நீக்க வேண்டும் என்று தேசிய கொடுப்பனுவுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் வருமா?
தேசிய கொடுப்பனுவுகள் ஆணையம் ஆதார் பரிவர்த்தனை முறையினை நீக்குவதாக அறிவித்து இருந்தாலும் மீண்டும் இந்த முறை அமலுக்கு வர வாய்ப்புகள் உள்ளதா என்பது பற்றிக் குறிப்பிடவில்லை என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.