வங்கிகளில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பெற்றுள்ள கடன்காரர்கள், முன் அனுமதியின்றி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தேவைப்பட்டால் கடவுச் சீட்டுகளை ரத்து செய்யவும் திட்டமிட்டுள்ளது.
பாஸ்போர்ட் ரத்து
நிதி அமைச்சக செயலாளர் ராஜீவ்குமார் தலைமையிலான குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வங்கி கடனாளிகளால் ஏற்படும் நிதி மற்றும் பொருளாதார ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு இந்திய பாஸ்போர்ட்
சட்டம் 10 இல் திருத்தம் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது. இதன்படி பாஸ்போட்டை பறிமுதல் செய்யவோ, ரத்து செய்யவோ முடியும்
விவரங்கள் சேகரிப்பு
50 கோடிக்கு மேல் கடன் பெற்ற கடனாளிகளின் பாஸ்போர்ட் விவரங்களைச் சேகரிக்குமாறு, வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்களின் வெளிநாட்டுப் பயணம் நியாயமானதாகவும், சட்டப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
வெளிநாட்டுப்பயணத்துக்குத் தடை
வரையறுக்கப்பட்டதற்கு எதிராகக் கடன் பெற்றவர்களின் விவரங்களை உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் வணிக நோக்கங்களுக்காக அடிக்கடி வெளிநாடு பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்படவுள்ளது.
உயர்மட்டக்குழுக்கள்
விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, உள்துறை, வெளியுறவுத்துறை அமைச்சர்கள், அமலாக்கத்துறை மற்றும் நடுவண் புலனாய்வுத்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவைப் பரிந்துரை செய்துள்ளது.
மோசடி பேர்வழிகள்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற நீரவ் மோடி, மற்றும் கிங் பிஷர் அதிபர் விஜய் மல்லையா ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதால் மோசடி பேர்வழிகள் என்று அறிவிக்கப்பட்டள்ளனர்.
எச்சரிக்கை
வங்கி அமைப்பைத் தூய்மைப்படுத்தும் நோக்கத்தில் ஈடுபட்டுள்ள நிதி அமைச்சகம் என்.பி.ஏ கணக்குகளை ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதில் முறைகேடு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி இருந்தும் மோசடி நோக்கத்துடன் கடன் பெற்றிருந்தால் மோசடிப் பேர்வழிகளாக அறிவிக்கப்படுவார்கள் என ஆர்.பி.ஐ வழிகாட்டு நெறிமுறை எச்சரித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications