வாரா கடன் அதிகரிப்புக்கு வங்கி மற்றும் வாடிக்கையாளர்கள் மட்டும் இல்லாமல் அரசு மற்றும் நீதிமன்றத்திற்கும் பங்குள்ளது என்று எஸ்பிஐ வங்கியின் தலைவரான ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
அன்மையில் நடைபெற்ற வங்கிகளுக்கு இடையிலான மாநாட்டில் பங்கேற்ற எஸ்பிஐ வங்கி தலைவரிடம் வாரா கடன் அதிகரிப்புக்கு யார் காரணம் என்று கேட்ட போது ரஜினிஷ் குமார் இந்தப் பதிலை அளித்தது குறிப்பிடத்தக்கது.
யாருக்கெல்லாம் பங்குண்டு?
வாரா கடன் அதிகரிப்பிற்கு வங்கிகள், வங்கி அதிகாரிகள், வங்கி துறை, அரசு மற்றும் நீதிமன்றம் என அனைவருக்கும் பங்கு இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
நிலக்கரி
1996-ம் ஆண்டு வங்கிகள் நிலக்கரி வணிகத்திற்குக் கடன் அளிக்கும் போது 20 வருடத்திற்குப் பிறகு நிலக்கரித் தொகுதி ஒதுக்கீடு ரத்துச் செய்யப்படும் என்றும் நாம் வழங்கிய கடன் சிக்கலில் மாற்றிக்கொள்ளும் என்று யாருக்கும் தெரியாது என்று குறிப்பிட்டார். 214 நிலக் கரி சுரங்களுக்கு 1993-ம் ஆண்டு அனுமதி அளித்த நிலையில் அவற்றுக்கு 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
மின்சாரம்
சில துறைகள் அதிக லாபம் அளித்து வந்தாலும் மின்சாரத் துறை இன்று வரை சிக்கலில் தான் உள்ளது. மின்சாரத் துறை வளர்ச்சி பொருளாதாரத்திற்குத் தொடர்ந்து வளர்ச்சி அளித்ஹ்டு வந்தாலும் லாபம் ஒன்றும் இல்லை என்றும் ரஜினிஷ் குமார் கூறினார்.
கடன்
கடன் அளிப்பதில் வங்கிகளுக்கு இடையில் உள்ள வழிமுறைகளும் இதற்குக் காரணமாக உள்ளது. சில நேரங்களில் முழுமையாக விதிகளைப் பின்பற்றிக் கடன் அளிக்கத் தாமதவதால் வேகமாகச் செயல்பட முயல்வது வாரா கடன் அதிகரிப்பிற்குக் காரணமாக அமைகிறது.
சிறு கடன்
சிறு கடன் அதிகளவில் அளிப்பது வங்கி துறைக்குப் பாதிப்பினை ஏற்படுத்தும். அதே நேரம் 500 கோடி ரூபாய் வரை கடன் வழங்குவதிலும் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளது.
வங்கிகள்
ஆவணங்களைச் சரிபார்த்து கடன் வழங்குவதைத் தவிரச் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு எல்லாம் பதில் அளிக்கும் மன நிலையில் வங்கிகள் இல்லை. பல வழக்குகளில் அது தெளிவான மோசடி என்று உள்ளது. நம்பிக்கை இருந்தாலும் நாங்கள் சரிபார்ப்போம். ஆனால் அதுவும் பல இடங்களில் சரியாக நடைபெறவில்லை என்றும் கூறினார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications