இந்திய பொதுத் துறை வங்கிகள் கடனை அளித்து விட்டு ஏமார்ந்து நிற்பது தொடர் கதையாகி உள்ள நிலையில் வங்கி மோசடி குறித்துத் தாமதமாகப் புகார் அளித்ததாக மூன்று பொதுத் துறை வங்கி நிறுவனங்கள் மீது தலா 1 கோடி ரூபாய் அபராதம் விதித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா உள்ளிட்ட வங்கிகளே மோசடி குறித்துத் தாமதமாகப் புகார் அளித்ததாகத் தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ
மோசடி குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில் இருந்தவற்றை இந்த மூன்று வங்கிகளும் பின் பற்றவில்லை என்பதால் 10 மில்லியன் ரூபாய் அபராதத்தினை விதித்ததாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரங்களின் படி வங்கி ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 47A (1) (c), 46 (4) (i) தாமதமாக மோசடி குறித்து வங்கிகள் புகார் அளித்துள்ளன என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
என்ன மோசடி?
மோசடி குறித்துத் தாமதமாக வங்கிகள் அளித்த புகார் என்று ஆர்பிஐ கூறியிருந்தாலும் அது என்ன மாதிரியான மோசடி என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
வங்கி மோசடிகள்
கிங்பிஷர் நிறுவனரான விஜய் மல்லையா 9,000 கோடி ரூபாயும், நீரவ் மோடி மற்றும் மேஹூல் சோக்ஸி 13,000 ரூபாயும் மோசடி செய்துள்ள நிலையில் இது போன்ற வங்கி மோசடி செய்திகள் தொடர்ந்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.
அச்சம் வேண்டாம்
இது போன்ற வங்கி மோசடிகள் குறித்துக் கவலைப்பட வேண்டும், இந்தப் பணத்தினை வங்கி கட்டணங்கள் மற்றும் பிற சேவைகள் மூலம் வங்கிகள் எளிதாகத் திரும்பப் பெற்றுவிடும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். அதே நேரம் சென்ற ஆண்டு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பொதுத் துறை வங்கிகளின் மறு மூலத்திற்காக 2.11 லட்சம் கோடி ரூபாய் அளிப்பதாக உறுதி அளித்தது மட்டும் இல்லாமல் அதில்2 தவணையினை அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications