மத்திய அரசிடம் தேசிய பேரிடர் நிதி உதவி அளிக்கத் தேவையான பணம் இல்லை என்றும் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் அதனால் ஜிஎஸ்டி செலுத்தும் போது 'பேரழிவு வரி' என்ற பெயரில் செஸ் வரிப் பிடித்தம் செய்யலாம் என்று நிதி அமைச்சகத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவராக உள்ள பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி இது குறித்து அட்டர்னி ஜெனரலிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கருத்து கேட்பு
மறுபக்கம் பேரழிவு வரி வசூல் செய்ய அனைத்து மாநில அரசுகளிடம் இருந்து கருத்துக்கள் கேட்டு ஜிஎஸ்டி கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. இந்தக் கடிதத்தில் அனைத்து மாநில அரசுகளிடமும் 15 முதல் 20 கேள்விகள் வரை கேட்டுள்ளனர். இதற்கு மாநில அரசுகள்ல் அளிக்கும் பதிலினை பொருத்து முடிவுகள் எடுக்கப்படும் என்று சுஷில் மோடி தெரிவித்துள்ளதாகக் கூறுகின்றனர்.
எப்படிப் பயன்படுத்தப்படும்?
மேலும் இதன் மூலம் வசூலிக்கப்படும் வரித் தொகை அந்தத்தந்த மாநிலங்களில் ஏற்படும் பேரழிவுகளுக்கு மட்டும் செலவு செய்யப்படுமா அல்லது தேசிய அளவில் பயன்படுத்தப்படுமா என்பது மாநில பிரதிநிதிகளுடன் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட உள்ளது.
பேரழிவு வரி வசூல் சரிவு
ஜிஎஸ்டி அமலுக்குக் வந்த பிறகு தேசிய பேரழிவு நிலை வரி சரிந்துள்ளது எனவே இந்த ‘பேரழிவு வரி' அமலுக்கு வர வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 2016-2017 நிதி ஆண்டில் தேசிய பேரழிவு நிலை வரி வசூல் 6,450 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே 2017-2018 நிதி ஆண்டில் 3,660 கோடி ரூபாயாகச் சர்ந்துள்ளது. இதனால் மாநிலங்களில் பேரிடர் ஏற்படும் போது நிதி உதவி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
அடுத்து வர இருக்கும் நவம்பர் மாத ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டுச் சுமுக முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications