பொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷ்னல் வங்கி 539.50 ரூபாய் மதிப்பிலான 10 கோடி பங்குகளை ஊழியர்களுக்கு விற்று அதன் மூலம் நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அது குறித்துப் புதன்கிழமை நடைபெற்ற போர்டு இயக்குநர்கள் இடையிலான கூட்டத்தில் என்ன விலைக்குப் பங்குகளை விற்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு பங்கின் விலை எவ்வளவு?
மேலும் 10 கோடி பங்குகளைப் புதிதாகப் பங்குகளாக வெளியிடப்பட்டு ஒரு பங்கு 53.95 ரூபாய் என ஊழியர்களுக்கு விற்பனை செய்யலாம் என்றும் முடிவு எடுத்துள்ளதாகச் செபிக்கு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
எப்போது முதல் பங்குகளை வாங்க முடியும்?
பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்களுக்கு விற்கும் இந்தப் பங்குகள் 2018 நவம்பர் 30 முதல் 2018 டிசம்பர் 10-ம் தேதி வரையில் கிடைக்கும்.
மத்திய அரசு
மத்திய அரசு 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பொதுத் துறை வங்கிகள் ஊழியர்களுக்குப் பங்குகளை விற்க அனுமதி அளித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் நல்ல அனுபவம் மற்றும் திறன் உள்ள ஊழியர்களுக்கு ஊக்கத் தொகையாகவும் பங்குகளை அளிக்க அனுமதி அளித்துள்ளனர்.
மோசடிகள்
விஜய் மல்லையா, நீரவ் மோடி, மேஹூல் சோக்ஸி உள்ளிட்டோரிடம் கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழந்துள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி தொடர்ந்து செயல்பட மூலதனம் தேவைப்படுவதே இந்தப் பங்கு விற்பனைக்கான காரணம் எனக் கூறப்படுகிறது.