ஊறுகாய் கம்பெனி கூட இப்படியொரு நெருக்கடியைச் சந்தித்ததாக கேள்விப்பட்டிருக்க முடியாது. கடந்த ஓராண்டு காலமாக அப்படியொரு நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது ஜெட் ஏர்ஸ் நிறுவனம். நரேஷ் கோயலின் சாதகக் கட்டம், எந்த பரிகாரங்கள் செய்தாலும் நிவர்த்தி செய்ய முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.
ஆசிரியர்கள்
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாதிரி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகளும், ஊழியர்களும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை முன் வைக்கவில்லை. சம்பளமே இல்லை என்பது தான் அவர்களின் போராட்டமாக உள்ளது. இந்தப் பிரச்சினையால் நேற்று மட்டும் 14 விமானங்களை ரத்து செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் குறிப்பிட்ட பகுதி ஊழியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் வரை ஊதியம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம் விமானிகள் பொறியாளர் உள்ளிட்டோருக்கு நிதி நெருக்கடி காரணமாக அக்டோபர் மாதம் முதல் ஊதியத்தை வழங்க அந்த நிறுவனத்தால் இயலவில்லை. இதனால் விமானிகள் பணியைப் புறக்கணித்ததால், கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இது போன்றதொரு பணிச்சூழலில் வேலை பார்க்க விரும்பவில்லை என்று நரேஷ் கோயலுக்கு விமானிகள் கடிதம் மூலம் தங்கள் ஆதங்கத்தை கொட்டியுள்ளனர்.
பயணிகளுக்கு இழப்பீடு
14 விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு குறுந்தகவல் மூலம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தகவல் அனுப்பியது. மாற்று ஏற்பாடு செய்து தரப்படாத பட்சத்தில் இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.
பேச்சு வார்த்தைக்கு அழைப்பு
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்ந்து இயங்க ஒத்துழைக்க வேண்டும் என்று ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். விரைவில் நிலுவையில் உள்ள சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம், ஊழியர்கள், விமானிகள் மற்றும் பொறியாளர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. நல்லது நடந்தால் சரி.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications