தில்லி: அபிஜித் சென், தில்லியின் வரலாற்று சிறப்பு மிக்க ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக இருக்கிறார். இவர் முன்னாள் திட்டக் குழுவில் உறுப்பினராகவும் இடம் பிடித்திருக்கிறார்.
மத்திய அரசின் பல்வேறு விவசாயம் மற்றும் அதற்கான விலை நிர்ணயக் கமிட்டிகளில் உறுப்பினராக இருந்திருக்கிறார். அதோடு மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா போன்ற மாநில திட்டக் குழுக்களிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு, ஐநா சபையின் மேம்பாட்டுத் திட்டக்கள், ஐநாவின் உனவு மற்றும் விவசாய அமைப்பு, OECD என பல்வேறு சர்வதேச அமைப்புகளிலும் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் இருந்திருக்கிறார்.
Press meet
சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் மனிதர் மோடியையும், மோடியின் திட்டங்கள் மற்றும் இடைக்கால பட்ஜெட் வரை எல்லாவாற்றையும் வெளுத்து வாங்கி இருக்க்கிறார். இனி அவர் மொழியில். முதலில் பட்ஜெட்டையே தாக்கத் தொடங்குகிறார். பட்ஜெட்டை ஒரு ஆண்டுக்கான பட்ஜெட் ஆக அறிவிக்காமல் பாஜக தன் தேர்தல் வாக்குறுதிப் பட்டியல் போல எல்லா தரப்பு மக்களையும் கவர பயன்படுத்திக் கொண்டது. இது ஒரு பட்ஜெட்டாகவே எனக்குத் தெரியவில்லை என மோடி மீது குற்றம் சுமத்துகிறார்.
Violations
அதனைத் தொடர்ந்து "பாஜக தான் பட்ஜெட் மரபுகள் மற்றும் வரம்புகளை மீறி வருமான வரித் துறைகளில் மாற்றம் செய்தது, விவசாயிகளுக்கான திட்டங்களை அறிவித்து அதை ஆண்டு பட்ஜெட் வருவதற்குள்ளேயே செயல்படுத்த துடிப்பது என எல்லாமே விதிமீறல்கள் தான்"
Before Election
மேலும் "வரும் மக்களவைத் தேர்தல் காலத்துக்குள் முதல் தவணையை விவசாயிகளுக்கு கொண்டு சென்று சேர்த்துவிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஆனால் இது சாத்தியமே இல்லை. அதுவும் அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் நடக்கவே நடக்காது. காரணம் மாநில அரசுகள் மத்திய அரசு கேட்கும் பட்டியலைத் தயார் செய்யவே சில மாதங்கள் தேவைப்படும். இதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வேகத்தில் வார்த்தைகளை விடக் கூடாது" என்கிறார் அபிஜித்
It is a height of stupidity
"தெலுங்கானாவிலும் விவசாயிகளூக்கு பணம் கொடுக்கிறார்கள். அவர்கள் ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு இவ்வளவு பணம் எனக் கொடுக்கிறார்கள். ஆக தெலுங்கானாவில் ஒரு நிலமுள்ள விவசாயிக்கு ஒர் ஹெக்டேருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும். ஆக ஒரு ஹெக்டருக்கு இவ்வளவு ரூபாயை விவசாயத்தில் முதலீடு செய்ததாக கருதலாம். ஆனால் மோடி அரசோ முட்டாள் தானமாக ஒரு விவசாய குடும்பத்துக்கு 2000 ரூபாய் என அறிவித்திருக்கிறார்கள். இதை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்வது சொல்லுங்கள்..?" என மோடியை மடக்குகிறார் அபிஜித் சென்.
Expenditure not Investment
"விவசாயிகளுக்கு நல்லது எனச் சொல்லி சொல்லியே இந்த திட்டத்தை புகழ் பெறச் செய்கிறார்களே ஒழிய, அந்த 6000 ரூபாய் விவசாயத்தில் ஒரு முதலீடாக மாற வாய்ப்பே இல்லையே பிறகு அது எப்படி விவசாயிகளுக்கு நன்மை கொடுக்கும், அந்த திட்டம் எப்படி விவசாயத் திட்டமாகும்" என கிடிக்கிப் பிடி போடுகிறார். அதோடு இது தெலுங்கானா திட்டத்தைப் போல விவசாயக் கூலிகளுக்கு ஒரு விடிவு காலம் கொடுக்கவில்லை. நிலமற்ற விவசாயிகளும் இந்திய விவசாய சமூகத்தில் ஒரு அங்கத்தினர் தான். அவர்களைப் பற்றி யோசிக்காமல் செய்தது மிகப் பெரிய தவறு. இதற்கு விவசாயிகளுக்கு மட்டுமே ஆண்டுக்கு 6000 கொடுப்பதற்கு பதிலாக மொத்த 18 கோடி கிராம புற மக்களுக்கும் ஆண்டுக்கு 6000 கொடுத்திருக்கலாம். என்கிறார் அபிஜித்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications