பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின் தொடங்கிய ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் மட்டும் சுமார் 90,000 கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் ஆகி இருப்பதாக நிதி அமைச்சகம் சொல்லி இருக்கிறது. இது ஜனவரி 30, 2019 நிலவரபடியாம்.
இந்த ஜன் தன் கணக்குத் திட்டத்தின் மூலம் மூன்று முக்கிய திட்டங்களைக் கொண்டு வந்தார்கள். 1. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா. 2. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் 3. அடல் பென்ஷன் யோஜனா.

இதில் முதல் திட்டமான பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஒரு லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டம். இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தின் கீழ் இணைந்தவர்கள் இறந்துவிட்டார்கள் என்றால் அவர்களூக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இரண்டாவது திட்டமான பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் ஒரு Accident policy. இந்த திட்டத்தின் கீழ் இணைந்திருப்பவர்களுக்கு விபத்து ஏற்பட்டு கை அல்லது காலில் நிரந்தர ஊனம் ஏற்பட்டாலோ அல்லது விபத்தின் மூலம் இறந்துவிட்டாலோ அவர்களுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை தரப்படும்.
மூன்றாவது திட்டமான அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் இணைந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் தரப்பில் இருந்து முதலீடு செய்ய வேண்டும், அரசும் மக்கள் சார்பாக கொஞ்சம் முதலீடு செய்யும். 60 வயதுக்குப் பின் நாம் செய்த முதலீட்டைப் பொறுத்து நமக்கு பென்ஷனாக காசு வரும்.
இதற்காகத் தான் ஜன் தன் கணக்குத் திட்டத்தைக் கொண்டு வந்தது பாஜக அரசு. இன்று அந்த எளிய மக்கள் கணக்கில் கூட சுமார் 90,000 கோடி ரூபாயை டெபாசிட்டாக பெற்று இருக்கிறார்கள் வங்கிகள்.
இந்த ஜன் தன் திட்டத்தின் கீழ் சுமார் 34.14 கோடி வங்கிக் கணக்குகள் இருக்கிறதாம். இதில் 53 சதவிகிதக் கணக்குகள் பெண்களின் கணக்காம். இந்த 34.14 கோடியில் 27.26 கோடி கணக்குகளுக்கு ரூபே கார்ட் வழங்கப்பட்டிருக்கிறதாம்.
இந்த 34.14 கோடி வங்கிக் கணக்குகளில் சராசரியாக ஒரு வங்கிக் கணக்கில் 2,615 ரூபாய் டெபாசிட்டாக இருக்கிறது. இதுவே மார்ச் 2015-ல் ஒரு டெபாசிட் கணக்கில் வெறும் 1,065 ரூபாய் தான் இருந்ததாம். ஆக இந்தியாவில் ஏழை எளிய மக்கள் கூட தங்கள் வங்கிக் கணக்குகளில் பணத்தைப் போடத் தொடங்கிவிட்டார்கள் எனச் சொல்கிறது நிதி அமைச்சகம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications