டெல்லி: 2018-19 நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி வசூலில் சாதனை படைத்துள்ளது. இது கடந்த 2018ஆம் நிதியாண்டைக் காட்டிலும் சுமார் 15.60 சதவிகிதம் அதிகமாகும்.
கடந்த 2018ஆம் நிதியாண்டில் மார்ச் மாத ஜிஎஸ்டி வசூலானது ரூ.92,167 கோடியாகும். ஆனால் 2019ஆம் நிதியாண்டில் இது ரூ.1,06,577 கோடியாக அதிகரித்தது. மார்ச் மாத ஜிஎஸ்டி வசூலில் மத்திய அரசின் பங்கான (CGST) ரூ.20,353 கோடியும், மாநில அரசின் (SGST) பங்கான ரூ.27,520 கோடியும், ஒருங்கிணைந்த (IGST) வரி வசூலான ரூ.50,418 கோடியும் அடங்கும்.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட 2017ஆம் ஆண்டு ஜூலை முதல் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் கணக்கில் எடுத்துக்கொண்டால் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் மட்டுமே 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டி சாதனை படைதுள்ளது.
கடைசி வாய்ப்பு
2018-19ஆம் நிதியாண்டின் இறுதி நாட்களான மார்ச் 30 மற்றும் 31ஆம் தேதி இரண்டும் விடுமுறை நாட்களாக இருப்பதால் ஜிஎஸ்டி வசூல் பாதிக்கப்படும் என்று பீதியில் மத்திய நேரடி வரிகள் ஆணையம் இவ்விரண்டு நாட்களையும் வேலை நாட்களாக இருக்கும் என்றும் வரி செலுத்துபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரி செலுத்திக் கொள்ளலாம் என்றும் CBDT அறிவித்தது.
வசூல் மந்தம்
மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்ததால் வரி செலுத்தும் அனைவரும் போட்டி போட்டு வரி செலுத்தினர். முன்னதாக கடந்த மார்ச் 27ஆம் தேதி வரையிலும் சுமார் 10.70 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வசூலாகி இருந்தது. இதனால் கலக்கத்தில் இருந்த ஜிஎஸ்டி துறையினர் வசூல் வேட்டையை முடுக்கி விட்டனர்.
வசூலில் புதிய சாதனை
ஜிஎஸ்டி வசூலை தீவிரப்படுத்தியாதால் கடந்த மார்ச் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் எதிர்பார்த்த வசூல் இலக்கை எட்டியது. இறுதியில் மார்ச் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,06,577 கோடியை எட்டி சாதனை படைத்தது. இது கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு மார்ச் மாத வரையிலும் வசூலான தொகையில் உச்சபட்ச வரி வசூலாகும்.
ஒருங்கிணைந்த வரி வசூல்
மார்ச் மாத ஜிஎஸ்டி வசூலில் மத்திய அரசின் பங்கான (CGST) ரூ.20,353 கோடியும், மாநில அரசின் (SGST) பங்கான ரூ.27,520 கோடியும், ஒருங்கிணைந்த (IGST) வரி வசூலான ரூ.50,418 கோடியும் அடங்கும். ஒருங்கிணைந்த வரி வசூலான ரூ.50,418 கோடி யில் இறக்குமதி வரியான ரூ.23,521 கோடியும், செஸ் வரியான ரூ.7,395 கோடியும், இறக்குமதிக்கான செஸ் வரியான ரூ.891 கோடியும் அடங்கும்.
ரூ.1,0,6577 கோடி வசூல்
கடந்த 2018ஆம் ஆண்டின் மார்ச் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.92,167 கோடி ஆகும். இதுவே 2019ஆம் ஆண்டு மார்ச் மாத வசூல் 15.6 சதவிகிதம் கூடுதலாக ரூ.1,06,577 கோடி வசூலாகி ஜிஎஸ்டி வசூலில் உச்சத்தை தொட்டது. 2018-19ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த மாதாந்திர சராசரி ரூ.98,114 கோடியாகும். இது முந்தைய ஆண்டைவிட 9.2 சதவிகிதம் கூடுதலாகும்.
வருவாய் வளர்ச்சி
கடந்த பிப்ரவரி மாதத்திற்காக ஜிஎஸ்டிஆர் 3பி ரிட்டன் தாக்கலைப் பொருத்தவரை மார்ச் 31ஆம் தேதி வரையிலும் 75.95 லட்சம் ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் புதிய இலக்கை எட்டியது குறித்து மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் விளக்கிய போது, ஜிஎஸ்டி வரி வசூல் என்பது வருவாய் வளர்ச்சியை காட்டுகிறது என்று தெரிவித்தனர். 2018-19ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டின் ஜிஎஸ்டி வசூல் கடந்த 2017-18ஆம் நிதியாண்டின் காலாண்டை விட 14.3 சதவிகிதம் கூடுதலாக வசூலாகி சாதனை படைத்தது எனலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications