டெல்லி : இந்தியாவில் உணவு மற்றும் உர மானியங்களைக் குறைக்க ஏரளமாக வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச அமைப்பான ஐ.எம்.எஃப் கூறியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்த வரை மக்களுக்கு இலக்கு இல்லாமல் உணவு மற்றும் உரங்களைக் கொடுக்க மானியத்தை கொடுக்க முடியும். அதற்கு இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இதன் மூலம் இந்த வகையான உணவுப் பொருட்கள் மற்றும் உரங்களுக்கு மானியத்தை வழங்க முடியும்.
அதேசமயம் அரசுக்கு ஜி.எஸ்.டி உள்ளிட்ட வரிகள் அரசின் வருவாய் மேம்பாட்டிற்காக நடவடிக்கைகள், நேர்மறை சீர்திருத்தத்தை கொண்டவையாக உள்ளன. இருப்பினும் வரி இணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள இன்னும் முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும்.
ஒருங்க்கிணைப்பு திட்டகளுக்கு முன்னுரிமை
தற்போதுதான் இந்தியாவில் நிதி ஒருங்கிணைப்பு திட்டங்களூக்கு படிப்படியாக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்திய பொருளாதார வளர்ச்சி தற்போது அதிகரித்து வரும் நிலையில் வெகு சிறப்பான முறையில் அதிகரித்து வருகின்றது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று உலக வங்கி ஏற்கனவே அறிவித்திருந்தது கவனிக்க தக்கதாகும். இதன் மூலம் பொருளாதரமும் வளர்ச்சி அடைவதோடு உணவு உற்பத்தி மற்றும் தொழிற்சாலை உற்பத்திகளும் உற்பத்தி வளர்ச்சி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாரக்கடனால் குறையும் மானியம்
இந்தியாவின் வளர்ச்சி அதிகரித்து வந்தாலும், இந்திய வங்கிகளின் வாராக்கடன் அளவு அதிகமாகவே உள்ளது. இதனால் வங்களில் இருந்து கடன் கொடுப்பதும் குறைகிறது. மேலும் இதனால் விவசாயம் மற்றும் தொழிற்துறை மானியங்களை குறைந்தே காணப்படுகின்றன. இதனால் மானியமும் மிக குறைந்த அளவே காணப்படுகிறது.
மூலதனத்தை அதிகரிக்க வேண்டும்
இதுபோன்ற சேவையை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியம் வங்கிகளுக்கு மூலதனத்தை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக அரசு வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் அரசு வங்கிகளின் மூலதனம் அதிகரிப்பதோடு அவர்களின் கடன் கொடுக்கும் எண்ணீக்கையும் அதிகரிக்கும். அதுவும் கிராமப்புறங்களில் இதன் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருக்கும் அந்த அமைப்புகள் கூறுகின்றன.
தேர்தல் அறிக்கைகள்- நிதி நெருக்கடி
அதுவும் தேர்தல் சமயமான தற்போதைய சூழலில் இந்தியா அரசியல் கட்சிகள் மாறி மாறி அறிக்கைகளை விடுத்து வருகின்றன. அதுவும் குறிப்பாக நிதி நெருக்கடியை சமாளிப்பாதாகவும், நிதி மேலாண்மையை அதிகரிப்பதாகவும் இந்த அறிக்கைகள் உள்ளன. இதன் மூலம் 50 சதவிகிதமாவது நிறைவேறாமல் இருந்திடுமா? மேலும் இந்தியாவின் நிதி மேலாண்மையானது படிபடிப்யாக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இந்தியாவில் மொத்த உற்பத்தியில் உள் நாட்டு உற்பத்தி 70 சதவிகிதமாகவும் உள்ளது.
உற்பத்தி வளர்ச்சியை அதிகரிக்க உதவும்
இது போன்ற திட்டங்களையும், அமைப்புகளையும், வரி விகிதங்களையும் ஒருங்கினைத்து பார்க்க வேண்டும். இதன் படி ஒருங்கிணைத்து பார்க்கும் போது மட்டுமே இதுபோன்ற பிரச்சனைக்களுக்கு சுமூக தீர்வு காண முடியும். மேலும் இது போன்ற யுக்திகள் வளர்ச்சியினை அதிகரிப்பதோடு, உற்பத்தியை வளர்ச்சியை அதிகரிக்கவும் ஏதேனும் ஒரு வகையில் உதவியாக இருந்து வருகின்றன.
More From GoodReturns

மக்களே இனி ஹோட்டல் பக்கமே போக முடியாது!! ஈரான் போரால் பிரியாணி முதல் பரோட்டா வரை விலை மாற போகுது!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications