நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூல் 1.13 லட்சம் கோடி ரூபாயை தாண்டியதால் திட்டமிட்டபடி இந்த நிதியாண்டின் இலக்கை எட்ட உதவியாக இருக்கும் என்று நிதியமைச்சக அறிக்கை கூறியுள்ளது.
டெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்தில் ரூ.1.13 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. நல்லதொரு தொடக்கம் பாதி வெற்றி அடைந்ததற்கு சமம் என்று சொல்வதுண்டு. அதே போல இந்த நிதியாண்டின் முதல் மாதத்திலேயே ஜிஎஸ்டி அமோக அறுவடை செய்து செய்துள்ளது. 72.13 லட்சம் பேர் GSTR-3B ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர்.
சிஜிஎஸ்டி ரூ. 21,163 கோடி வசூலாகியுள்ளது. எஸ்ஜிஎஸ்டியாக ரூ. 28,801 கோடியும் ஐஜிஎஸ்டியாக ரூ 54,733 கோடியும் வசூலாகியுள்ளதாக ஜிஎஸ்டி வரிமுறை நடைமுறைப்படுத்திய பின் வசூலாகும் அதிக தொகை இது என மத்திய அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

கடந்த 2017-18ஆம் நிதியாண்டின் ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டாலும், பெரும்பான்மையான பொருட்களுக்கு வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதாக பொதுமக்களும், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரும் அதிருப்தி தெரிவித்தனர்.
கடந்த 2018-19ம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரியாக சுமார் 12.9 லட்சம் கோடி ரூபாய் வசூலிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது மாதாந்திர சராசரியாக சுமார் 1.07 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க திட்டமிடப்பட்டது. நிதி அமைச்சகத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுபோலவே ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரியானது 1,03,458 கோடி ரூபாய் வசூலாகி சாதனை படைத்தது. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.1,06,577 கோடி வசூலாகி ஜிஎஸ்டி வசூலில் உச்சத்தை தொட்டது. 2018-19ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த மாதாந்திர சராசரி ரூ.98,114 கோடியாகும். இது முந்தைய ஆண்டைவிட 9.2 சதவிகிதம் கூடுதலாகும்.
2019-20 ஆம் நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்தில் 1,13,865 கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 10.05 சதவிகிதம் அதிகமாகும். 2018-19ம் நிதியாண்டின் சராசரியுடன் ஒப்பிடும் போது 16 சதவிகிதம் அதிகமாகும். மார்ச் முதல் ஏப்ரல் 30 வரை 72.13 லட்சம் பேர் GSTR-3B ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications