டெல்லி : " செத்தும் கொடுத்தான் சீதக்காதி " என்ற பழமொழிக்கு ஏற்ப நடிகை ஸ்ரீ தேவி தான் இறந்த பிறகும் கூட தனது கடைசி படமான மாம் படத்தின் மூலம் ரூ11.47 கோடியை வசூல் செய்துள்ளதாம். இது குறித்து ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் ஸ்ரீ தேவி எங்கும் செல்லவில்லை. நம்மோடுதான் இருக்கிறார் என்றும் கூறியுள்ளராம்.
கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பதற்கு இது ஒரு சிறந்த உதராணம். இதை நாம் நம் வாழ்வில், அலுவலகத்தில், தொழிலில் அனைத்திலும் நடைமுறைப்படுத்தும் போது கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் அது நமக்கு நன்மையாகவே முடியும்.
அதற்கு சரியான உதாரணம் தான் இந்த வசூல் சாதனை. அது பணமாகவோ?புகழாகவோ? ஏன் அனுபவமாகவோ கூட இருக்கலாம். ஆக ஒருவர் தொழிலை செய்யும் போதோ அல்லது வேலையில் ஈடுபடும்போது அதை முழு கவனத்துடனும், ஈடுபாட்டுடனும் செய்யும்போது அதற்கான பலன் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த கட்டுரை ஸ்ரீ தேவி படத்தின் மூலம் இவ்வாறு சம்பாதித்து விட்டார் என்பதால் மட்டும் கூறவில்லை. இன்று நம்மில் பலரும் இப்படி தான் இருக்கிறோம். ஒரு வேலையை கடமைக்கு மட்டும் செய்து விட்டு பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடாமல் அதை முழு மனதோடு செய்யும்போது அதற்கான நிச்சய பலன் கிடைக்கும் என்றாவது ஒரு நாள் கிடைக்கும்.
தமிழகத்தில் சிவகாசியில் பிறந்த நடிகை ஸ்ரீதேவி , தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என பல படங்களில் நடித்த ஸ்ரீதேவி ஹிந்தியில் பல படங்களில் நடித்து பாலிவுட்டில் கொடிகட்டி பறந்தவர்.
இந்த நிலையில் கடந்தாண்டு துபாயில் உயிரிழந்தார். இதோடு இவர் கடைசியாக நடித்த மாம் திரைப்படம் இந்தியாவில் நல்ல வசூல் சாதனை படைத்தது.
அதோடு பல விருதுகளை வாங்கிய ஸ்ரீதேவி கடைசியாக மாம் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் இந்திய, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. இந்த நிலையில் 'மாம்' திரைப்படம் சீனாவில் கடந்த மே 10ம் தேதி வெளியானது. படம் ரிலீஸ் ஆன சில நாட்களுக்குள்ளேயே $1.64 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம்.
இதோடு ஸ்ரீ தேவி சில நிறுவங்களில் விளம்பர தூதுவராகவும், அதோடு, சில நாடகங்களிலும் நடித்துள்ளார். அதோடு அவர் வைத்திருந்த விலை மதிப்புள்ள 7 கார்கள் மொத்தம் 9 கோடிக்கும் மேல் வரும், பாலிவுட் சினிமா நடிகைகளில் 2 கோடி மதிப்புள்ள Bentley கார் வாங்கிய முதல் நடிகை இவர்தானாம் இவரின் 3 பங்களா விலை மதிப்பு மட்டும் சுமார் 62 கோடி விலை மதிப்பு வருமாம். எது எப்படியோ ஸ்ரீ தேவியின் மரணம் அனைவருக்கும் வருத்தமே. டெல்லி : " செத்தும் கொடுத்தான் சீதக்காதி " என்ற பழமொழிக்கு ஏற்ப நடிகை ஸ்ரீ தேவி தான் இறந்த பிறகும் கூட தனது கடைசி படமான மாம் படத்தின் மூலம் ரூ11.47 கோடியை வசூல் செய்துள்ளதாம். இது குறித்து ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் ஸ்ரீ தேவி எங்கும் செல்லவில்லை. நம்மோடுதான் இருக்கிறார் என்றும் கூறியுள்ளராம்.
கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பதற்கு இது ஒரு சிறந்த உதராணம். இதை நாம் நம் வாழ்வில், அலுவலகத்தில், தொழிலில் அனைத்திலும் நடைமுறைப்படுத்தும் போது கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் அது நமக்கு நன்மையாகவே முடியும்.
அதற்கு சரியான உதாரணம் தான் இந்த வசூல் சாதனை. அது பணமாகவோ?புகழாகவோ? ஏன் அனுபவமாகவோ கூட இருக்கலாம். ஆக ஒருவர் தொழிலை செய்யும் போதோ அல்லது வேலையில் ஈடுபடும்போது அதை முழு கவனத்துடனும், ஈடுபாட்டுடனும் செய்யும்போது அதற்கான பலன் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த கட்டுரை ஸ்ரீ தேவி படத்தின் மூலம் இவ்வாறு சம்பாதித்து விட்டார் என்பதால் மட்டும் கூறவில்லை. இன்று நம்மில் பலரும் இப்படி தான் இருக்கிறோம். ஒரு வேலையை கடமைக்கு மட்டும் செய்து விட்டு பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடாமல் அதை முழு மனதோடு செய்யும்போது அதற்கான நிச்சய பலன் கிடைக்கும் என்றாவது ஒரு நாள் கிடைக்கும்.
தமிழகத்தில் சிவகாசியில் பிறந்த நடிகை ஸ்ரீதேவி , தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என பல படங்களில் நடித்த ஸ்ரீதேவி ஹிந்தியில் பல படங்களில் நடித்து பாலிவுட்டில் கொடிகட்டி பறந்தவர்.
இந்த நிலையில் கடந்தாண்டு துபாயில் உயிரிழந்தார். இதோடு இவர் கடைசியாக நடித்த மாம் திரைப்படம் இந்தியாவில் நல்ல வசூல் சாதனை படைத்தது.
அதோடு பல விருதுகளை வாங்கிய ஸ்ரீதேவி கடைசியாக நடித்த மாம் படம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. இந்த நிலையில் 'மாம்' திரைப்படம் சீனாவில் கடந்த மே 10ம் தேதி வெளியானது. படம் ரிலீஸ் ஆன சில நாட்களுக்குள்ளேயே $1.64 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம்.
இதோடு ஸ்ரீ தேவி சில நிறுவங்களில் விளம்பர தூதுவராகவும், அதோடு, சில நாடகங்களிலும் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அவர் வைத்திருந்த விலை மதிப்புள்ள கார்கள் மொத்தம் 9 கோடிக்கும் மேல் வருமாம், பாலிவுட் சினிமா நடிகைகளில் 2 கோடி மதிப்புள்ள Bentley கார் வாங்கிய முதல் நடிகை இவர்தானாம். இவரின் 3 பங்களா விலை மதிப்பு மட்டும் சுமார் 62 கோடி விலை மதிப்பு வருமாம். எது எப்படியோ ஸ்ரீ தேவியின் மரணம் அனைவருக்கும் வருத்தமே.