மும்பை : இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த நிலையில், இது மஹாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 12,021 விவசாயிகள் மூன்று ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆமாங்க.. கடந்த 2015 - 2018 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 12,021 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளது.
எனினும் அதே நேரம் ரூ.19,000 விவசாயக் கடனும் தள்ளுபடி செய்துள்ளதாகவும் அம்மாநில முதல்வர் தேவேந்திரா பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
3 மாதங்களில் 610 பேர் தற்கொலை
அம்மாநிலத்தில் பாஜாக தலைமையிலான தேவேந்திரா பட்நாவிஸ் முதல்வராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் அங்கு நடந்து வரும் கூட்டத்தொடரில் புனரமைப்பு மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் சுபாஸ் தேஸ்முக் அளித்த அறிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 12,021 விவாசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிலும் நடப்பு ஆண்டின் தொடக்க 3 மாதங்களில் மட்டும் 610 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் அறிக்கையை சமர்பித்துள்ளாராம்.
இறந்தவர்கள் இழப்பீடு பெற்றவர்களும் உண்டு
மொத்தம் தற்கொலை செய்து கொண்டுள்ளவர்களின் 12021 பேரில் 6888 பேர் விவசாய இழப்பீடு பெற தகுதியானவர்கள். ஆமாங்க.. இதில் கிட்டத்தட்ட பாதிபேர் இழப்பீடு பெற தகுதியானவர்களாம். இதில் 6845 விவசாயிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாம். அதிலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இறந்த 610 பேரில் 192 பேர் இழப்பீடு பெற தகுதியானவர்களாம். இதில் சுமார் 92 விவசாயிகள் இல்லை எனவும், மீதம் இருக்கும் 323 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
43.32 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்
இதற்கு பதில் கூறிய முதல்வர் தேவேந்திரா பட்நாவிஸ், விவசாயிகளுக்கு சுமார் ரூ.24,000 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் சுமார் 50 லட்சம் விவாசயிகள் கடன் தள்ளுபடி பெறுவார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அதோடு இதில் மொத்த எண்ணிக்கையில் இதுவரை 43.32 லட்சம் விவசாயிகள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இதுவரை 19,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் விவசாயிகளா?
ஒரு மாநிலத்தில் ஒருவர் இறந்தால் உடனே அவர் விவசாயி என்று அர்த்தம் அல்ல. அவர் உண்மையிலேயே விவசாயியா என்று சட்டம் தான் முடிவு செய்யும். அவ்வாறு ஒரு வேலை தற்கொலை செய்து கொண்டவர் உண்மையிலேயே விவசாயி என்றால் அவருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
பெயர் இருந்தால் போதும்?
அதோடு குடும்பத்தில் எந்தவொரு நபருக்கும் விவசாய ஆவணங்களில் பெயர் இருந்தால் கூட இறந்த நபராக இருந்தாலும் சரி, அல்லது குடும்பத்தின் எந்தவொரு உறுப்பினரும் தேசியமயமாக்கப்பட்ட அல்லது கூட்டுறவு வங்கிகளிலோ, கூட்டுறவு கடன் சங்கங்கள், அல்லது உரிமம் பெற்ற பணக் கடன் வழங்குனர்களிடமிருந்து கடன் பெற்றிருந்தால் இழப்பீடு பெற தகுதியுடையவராக கருதப்படுகிறார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications