டெல்லி : பட்ஜெட்க்கு முந்தைய நாளில் வெளியிடப்படும் "Economic survey"யில் 2019ம் நிதியாண்டிற்கான உணவு தானிய உற்பத்தி 283.4 மில்லியன் டன் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் நிலவிவரும் வறட்சியின் காரணமாக மொத்த விவசாயமும் பாதிப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தானிய உற்பத்தி எந்த அளவுக்கு இருக்கும், முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது எப்படி இருக்கும்? என்று தான் தெரியவில்லை.
இந்த நிலையில் எக்னாமிக் சர்வேயில் கூறியிருக்கும் அளவு உற்பத்தி இருக்குமா ? என்று பொறுத்திறுந்து தான் பார்க்க வேண்டும்.
அதிலும் நடப்பு ஆண்டிலும் கூட போதிய பருவமழையின்மையால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும் என்றே முன்பு வந்த கருத்து கணிப்புகள் கூறி வந்த நிலையில், இந்த மதிப்பீடு எந்த அளவுக்கு சாத்தியம் என்று தான் தெரியவில்லை.
குறிப்பாக முந்தைய ஆண்டுகளி இதன் வளர்ச்சி அதியமாக இருந்திருந்தாலும் தற்போதைய மதிப்பு குறைவாக தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனினும் இதுவும் சாத்தியமா என்பது மிக கஷ்டமான ஒரு விஷயமே.
மிக அதிக தானிய உற்பத்தி செய்யும் மாநிலங்களான மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில், சராசரி அளவு மழையளவில் பாதி கூட இல்லை என்பதே உண்மை.
கடந்த 2015 - 2016ல் உற்பத்தி அளவு 251.5 மில்லியன் டன்களாக இருந்தது. இதுவே 2016 - 2017ல் 275.1 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் கடந்த 2017 - 2018ம் ஆண்டு 285 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே 2018 -2019 ம் ஆண்டில் 283.4 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 3 வது முறை மீண்டும் மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இது முன்னர் 281.37 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே விலைவாசிகள் அதிகரித்திருக்கும் நிலையில், உற்பத்தி குறையும் பட்சத்தில் ஏறுமதியும் குறையலாம் என்றும் கருதப்படுகிறது. அதோடு உள் நாட்டிலும் விலை அதிகரிக்கலாம் என்றும் நிபுனர்கள் முன்னரே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.