இந்தியாவில் கடந்த சில வாரங்களாக எந்தத் துறையைப் பார்த்தாலும் தொய்வு, சரிவு, பிரச்சனை எனத் தொடர்ந்து கேட்டு வரும் நிலையில், தற்போது இந்த வரிசையில் ரியல் எஸ்டேட் துறையும் சேர்ந்துள்ளது. மத்திய அரசு அனைவருக்கும் வீடு என்ற தீட்டத்தின் கீழ் மலிவான விலை வீட்டிற்குச் சலுகை வழங்கியது.
இதைத்தொடர்ந்து பல ரியல் எஸ்டேட் நிறுவனமான மலிவான வீட்டுகளைக் கட்டி குவித்தது. ஆரம்பத்தில் மளமளவென விற்பனை ஆன மலிவு விலை வீடுகள் தற்போது பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ளது.
மவுசு குறைந்தது
மாத வருமான கிடைக்க வர்த்தக வளர்ச்சி மிகவும். ஆனால் நாட்டின் வர்த்தக வளர்ச்சி தற்போது மோசமான சரிவு பாதையில் உள்ளது, இதோடு புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதில் இருக்கும் பிரச்சனை மக்களை வாட்டி வதைக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் மக்கள் மத்தியில் மலிவு விலை வீட்டுக்கான மவுசு குறைந்துவிட்டது.
4 லட்ச வீடுகள்
இதன் எதிரொலியாகத் தற்போது இந்திய ரியல் எஸ்டேட் துறையில் சுமார் 4.12 லட்ச மலிவு விலை அப்பார்ட்மென்ட் வீடுகள் விற்பனை ஆகாமல் கிடக்கிறது. இந்த வீடுகளின் அதிகப்படியான விலையே 45 லட்சம் தான்.
இதைச் சரி செய்ய மத்திய அரசு தற்போது வீட்டு கடனுக்காகச் செலுத்தும் வட்டிக்கு கூடுதல் வரிச் சலுகை அறிவித்துள்ளது. வீட்டு கடனுக்குச் செலுத்தும் வட்டி தொகைக்கு 2 லட்சம் ரூபாய் வரையில் இருந்த வரிச் சலுகை தற்போது 3.5 லட்சம் ரூபாய் வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
9 நகரங்கள்
தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி இந்தியாவின் முன்னணி நகரங்களான குர்காரம், நொய்டா, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 9 நகரங்களில் சுமார் 7.98 லட்ச வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளது.
இதில் 4.12 லட்ச வீடுகள் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மலிவு விலை வீடுகள்.
வேகமான விற்பனை
மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளால் இத்துறையில் விற்பனை ஆகாமல் கிடக்கும் 8 லட்ச வீடுகள் இனி வரும் வாரங்களில் வேகமாக விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களும் இந்தச் சலுகையைப் பயன்படுத்த முன்வந்து புதிய வீடுகளை வாங்க முன்வந்து உள்ளனர். ரியல் எஸ்டேட் துறையின் கதையைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications