இந்தியாவில் கடந்த சில வாரங்களாக எந்தத் துறையைப் பார்த்தாலும் தொய்வு, சரிவு, பிரச்சனை எனத் தொடர்ந்து கேட்டு வரும் நிலையில், தற்போது இந்த வரிசையில் ரியல் எஸ்டேட் துறையும் சேர்ந்துள்ளது. மத்திய அரசு அனைவருக்கும் வீடு என்ற தீட்டத்தின் கீழ் மலிவான விலை வீட்டிற்குச் சலுகை வழங்கியது.
இதைத்தொடர்ந்து பல ரியல் எஸ்டேட் நிறுவனமான மலிவான வீட்டுகளைக் கட்டி குவித்தது. ஆரம்பத்தில் மளமளவென விற்பனை ஆன மலிவு விலை வீடுகள் தற்போது பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ளது.
மவுசு குறைந்தது
மாத வருமான கிடைக்க வர்த்தக வளர்ச்சி மிகவும். ஆனால் நாட்டின் வர்த்தக வளர்ச்சி தற்போது மோசமான சரிவு பாதையில் உள்ளது, இதோடு புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதில் இருக்கும் பிரச்சனை மக்களை வாட்டி வதைக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் மக்கள் மத்தியில் மலிவு விலை வீட்டுக்கான மவுசு குறைந்துவிட்டது.
4 லட்ச வீடுகள்
இதன் எதிரொலியாகத் தற்போது இந்திய ரியல் எஸ்டேட் துறையில் சுமார் 4.12 லட்ச மலிவு விலை அப்பார்ட்மென்ட் வீடுகள் விற்பனை ஆகாமல் கிடக்கிறது. இந்த வீடுகளின் அதிகப்படியான விலையே 45 லட்சம் தான்.
இதைச் சரி செய்ய மத்திய அரசு தற்போது வீட்டு கடனுக்காகச் செலுத்தும் வட்டிக்கு கூடுதல் வரிச் சலுகை அறிவித்துள்ளது. வீட்டு கடனுக்குச் செலுத்தும் வட்டி தொகைக்கு 2 லட்சம் ரூபாய் வரையில் இருந்த வரிச் சலுகை தற்போது 3.5 லட்சம் ரூபாய் வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
9 நகரங்கள்
தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி இந்தியாவின் முன்னணி நகரங்களான குர்காரம், நொய்டா, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 9 நகரங்களில் சுமார் 7.98 லட்ச வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளது.
இதில் 4.12 லட்ச வீடுகள் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மலிவு விலை வீடுகள்.
வேகமான விற்பனை
மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளால் இத்துறையில் விற்பனை ஆகாமல் கிடக்கும் 8 லட்ச வீடுகள் இனி வரும் வாரங்களில் வேகமாக விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களும் இந்தச் சலுகையைப் பயன்படுத்த முன்வந்து புதிய வீடுகளை வாங்க முன்வந்து உள்ளனர். ரியல் எஸ்டேட் துறையின் கதையைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications