அரசுக்கு முக்கிய வருவாயாக இருக்கும் ஜிஎஸ்டி வருவாய் குறையும் போது, மாநில அரசுகளுக்கு இழப்பீடு நிதி வழங்குவதில் சிக்கல் உருவாகும் வாய்ப்பும் உள்ளது என்றும் கருதப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று கோவாவில் ஜிஎஸ்டி கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் வரி விகிதத்தினை கிட்டதட்ட 10 சதவிகிதம் குறைத்தார். அதிலும் முன்னதாக உள்ள நிறுவனங்களுக்கு 22 சதவிகிதமாகவும், இதே புதியதாய் ஆரம்பிக்கப்படும் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு 15 சதவிகித கார்ப்பரேட் வரி என்றும் கூறியிருந்தார்.

இதனால் நடப்பு நிதியாண்டில் கணக்கிட்டிருந்தது போல அல்லாமல் ஜிஎஸ்டி வருவாய் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் தற்போது மாநில அரசின் வருடாந்திர ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை 14 சதவிகிதத்திற்கு கீழ் குறையும்போது, மத்திய அரசு இழப்பீடு வழங்கி வருகிறது.
பொருளாதார வளர்ச்சி மிகவும் மந்தநிலையை அடைந்திருப்பதன் அறிகுறியாக கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில், ஜிஎஸ்டி வளர்ச்சி விகிதம் வெறும் 5 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. இது இதற்கு முந்தைய காலாண்டில் 5.8 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது கடந்த ஜூன் காலாண்டில் கண்ட உற்பத்தி வளர்ச்சியானது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி என்றும் கூறப்படுகிறது. கடந்த 2012 - 2013ம் வருடத்தில் இந்த ஜிடிபி வளர்ச்சியானது வெறும் 4.3 சதவிகிதமாக வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய அரசு 2019 - 2020 நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மிகு வரி வசூல் செய்யப்படும் என்றும் கணித்திருந்தது. மேலும் இது சராசரியாக மாதம் தோறும் 8,000 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கூறியிருந்தது. ஆனால், வரி வசூலானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 7,272 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் இந்த வரி வசூலானது வரும் மாதங்களில் இன்னும் குறையலாம் எனவும் கருதப்படுகிறது.
நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் மத்திய அரசு 45,784 கோடி ரூபாய் நிதியை மாநிலங்களுக்கான இழப்பீட்டு நிதியாக விடுவித்தது. மத்திய அரசின் இழப்பீடு வழங்கும் திட்டம் ஜிஎஸ்டி சட்டத்தின் படி, 5 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என்று கூறப்படும் நிலையில், பல மாநில அரசுகள் இதனை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்குமாறும் வலியுறுத்தி வருகின்றன
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications