ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, ஆட்டொமொபைல் துறையில் விற்பனையை ஊக்குவிப்பதாக அரசு பற்பல சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் அரசு மந்த நிலையில் உள்ள பொருளாதாரத்தினை மேம்படுத்த தொடர்ந்து பற்பல சலுகைகளை வழங்கி வருகிறது.
இதையடுத்து அரசின் சலுகைகளும் வாகன துறையில் அளிக்கப்பட்டு வரும் சலுகையும் விற்பனையை சற்று அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் மாத விற்பனையானது அதிகரித்துள்ளது. விற்பனையை அதிகரிக்க பல தள்ளுபடிகள் சலுகைகள் பெரிதும் உதவியுள்ளன என்றும் கிராண்ட் தோர்ண்டன் இந்தியா எல்எல்பியின் பங்குதாரர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
புதிய வாகனங்களின் அறிமுகமும் இதற்கு சற்று கைகொடுத்துள்ளது என்றே கூறலாம். இந்த நிலையில் பயணிகள் வாகன விற்பனையும் மற்றும் இரு சக்கர வாகன விற்பனையும் கடந்த ஆகஸ்ட் மாததுடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது.
மேலும் மத்திய நிதியமைச்சர் குறைத்துள்ள கார்ப்பரேட் வரி விகிதமானது 30 சதவிகிதத்திலிருந்து, 25.17 சதவிகிதமாக குறைத்துள்ளார். இதன் காரணமாக உடனடி விலைக் குறைப்பு தள்ளுபடியை கொடுக்கவும் இது காரணமாக அமைந்தது. இது விற்பனையை ஊக்குவிக்கவும் காரணமாக அமைந்துள்ளது.
இது தவிர அரசு சார்ந்த நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான கார்களை வாங்க மத்திய நிதியமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்த அறிக்கையானது நலிந்து போயிருந்த வாகன விற்பனையில் சற்று ஏற்றத்தைக் கொடுத்துள்ளது என்றும், இது இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கலாம் என்றும் கூறியுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வட்டி குறைப்பானது மேலும் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் என்றும் ஃபிட்ச் மதிப்பீடுகள் இணை இயக்குனர் சிந்தீப் போஹ்ரா கூறியுள்ளார்.
அதிகளவிலான ஜிஎஸ்டி விகிதங்கள், பண்னை பிரச்சனைகள், தேங்கி நிற்கும் ஊதிய பிரச்சனைகள், பணப்புழக்கம் ஆகியவற்றால் ஒட்டுமொத்த துறையும் மந்த நிலையை எதிர்கொள்கிறது. இதனால் உற்பத்தியும் வியத்தகு முறையில் சரிந்து, வேலை இழப்புக்கு வழி வகுத்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் பயணிகள் மற்றும் இருசக்கர வாகன விற்பனையானது மிக மோசமான அளவில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 15,000 ஒப்பந்த ஊழியர்கள் தங்களது ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். மேலும் மில்லியன் கணக்கான வேலை மிக மோசமான நிலையில் உள்ளது என்றும் ஆட்டோமொபைல் உற்பத்தி துறை சங்கமான சியாம் எச்சரித்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications