பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பஞ்சாப் மற்றும் மகாரஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்து இருக்கும் வாடிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

வங்கி வாடிக்கையாளர்களைச் சந்தித்த பின், உடனடியாக ஆர்பிஐ ஆளுநரைச் சந்தித்து, பஞ்சாப் மற்றும் மகாரஷ்டிரா கூட்டுறவு வங்கி பிரச்னை தொடர்பாக பேச இருப்பதாகவும் உறுதி அளித்து இருக்கிறார். அதோடு மேற்கொண்டு பஞ்சாப் மற்றும் மகாரஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்தது போல மற்ற வங்கிகளில் நடக்காத வண்ணம் சட்டத்தில் என்ன வழி முறைகள் இருக்கிறதோ அவைகளையும் பார்த்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர்..!

மத்திய நிதி அமைச்சகம் மற்றும் மத்திய ரிசர்வ் வங்கியில் இருந்து அதிகாரிகளை கொண்ட குழு, இந்த பஞ்சாப் மற்றும் மகாரஷ்டிரா கூட்டுறவு வங்கி பிரச்னையை சமாளிக்க இருக்கிறார்களாம்.

சில வாரங்களுக்கு முன்பில் இருந்து தான் இந்த பஞ்சாப் மற்றும் மகாரஷ்டிரா கூட்டுறவு வங்கி பற்றிய செய்திகள் வெளியாகத் தொடங்கின. இந்த பஞ்சாப் மற்றும் மகாரஷ்டிரா கூட்டுறவு வங்கி சிக்கலால் ஒட்டு மொத்த இந்திய வங்கித் துறை மீதும் ஒரு புதிய அழுத்தமும் கவலையும் ஏற்பட்டு இருக்கிறது. தற்போதைக்கு மத்திய ரிசர்வ் வங்கி, இந்த பஞ்சாப் மற்றும் மகாரஷ்டிரா கூட்டுறவு வங்கியைப் பார்த்துக் கொள்கிறது.

இந்த பஞ்சாப் மற்றும் மகாரஷ்டிரா கூட்டுறவு வங்கி, இந்தியாவின் மிகப் பெரிய கூட்டுறவு வங்கிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கியில் சுமார் 9 லட்சம் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை டெபாசிட் செய்து வைத்து இருக்கிறார்களாம்.

இந்த பஞ்சாப் மற்றும் மகாரஷ்டிரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் தான் இனி 25,000 ரூபாய் மட்டுமே தங்களின் ஒரு வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிட வேண்டி இருக்கிறது. அதோடு இந்த பஞ்சாப் மற்றும் மகாரஷ்டிரா கூட்டுறவு வங்கி, மேற்கொண்டு எந்த ஒரு புதிய கடன்களைக் கொடுக்கவோ, கடன்களை நீட்டிக்கவோ, புதிய முதலீடுகளைச் செய்யவோ அனுமதி மறுத்து இருக்கிறது ஆர்பிஐ என்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

finance minister met Punjab and Maharashtra cooperative bank depositors

Central finance minister nirmala sitharaman met Punjab and Maharashtra cooperative bank depositors and assured to meet RBI governor to speak regarding pmc bank issue.
Story first published: Thursday, October 10, 2019, 14:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X