கொரோனாவுக்கு பிறகு சீனாவில் செயல்பட்டு வந்த பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை பிற நாடுகளுக்கு மாற்ற தொடங்கின. அந்த நிறுவனங்களை நம் நாட்டுக்கு இழுக்கும் நோக்கில் மத்திய அரசு உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை அமல்படுத்தியது.
இந்த திட்டத்தால் உள்நாட்டில் உற்பத்தி அதிகரிப்பதோடு, ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பும் கிடைக்கும். தொலைத்தொடர்பு, ஜவுளி மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட 14 துறைகளுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் அரசு நிதி சலுகைகளை அளித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த மே மாதத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, உள்நாட்டில் லேப்டாப், டேப்லெட்டுகள், ஆல் இன் ஒன் பி.சி.க்கள், சர்வர்கள் மற்றும் அல்ட்ரா ஸ்மால் பார்ம் பாக்டர் கருவிகள் ஆகியவற்றை இந்தியாவில் அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ஆறு ஆண்டு காலத்துக்கு ரூ.17,000 கோடி மதிப்பிலான ஐ.டி. ஹார்ட்வேருக்கான புதுப்பிக்கப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு (பி.எல்.ஐ.) திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தால் ரூ.3.35 லட்சம் கோடி மதிப்பிற்கு உற்பத்தி அதிகரிப்பதோடு, 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.டி. ஹார்ட்வேர் துறைக்கும் பி.எல்.ஐ. திட்டம் விரிவுப்படுத்தபட்டதால், டெல், எச்.பி. மற்றும் லெனோவா உள்பட 40 நிறுவனங்கள், இந்த திட்ட காலத்தில் ரூ.4.65 லட்சம் கோடி மதிப்பிலான மடிக்கணினிகள், டேப்லெட், சர்வர்கள் மற்றும் பிற உபகரணங்களை தயாரிக்கும் நோக்கில் இந்த திட்டத்துக்கு விண்ணப்பம் செய்து இருந்தன. இதனை பரிசீலனை செய்த அரசு, டெல், பாக்ஸ்கான், எச்.பி., ரைஸ்சிங் ஸ்டார்ஸ், இந்தியா சேல்ஸ் உள்பட 27 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், டெல், எச்.பி. உள்பட மொத்தம் 27 நிறுவனங்கள் ஐ.டி. ஹார்டுவேருக்கான பி.எல்.ஐ. திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 23 நிறுவனங்கள் அறிவிக்கப்பட்ட நாளிலேயே உற்பத்தியை தொடங்க தயாராக உள்ளன. மேலும் 4 நிறுவனங்கள் 90 நாட்களுக்குள உற்பத்தியை தொடங்கும்.
இந்த 27 நிறுவனங்கள் ரூ.3,000 கோடி முதலீடு செய்யும், நேரடியாக 50 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 1.50 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டத்துக்கு ஒப்புதல் பெறாத எஞ்சிய நிறுவனங்களை மதிப்பீடு செய்து வருகின்றன. அந்த நிறுவனங்களும் இந்த திட்டத்தில் இணையும் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications