மத்திய அரசின் ஜிஎஸ்டி 2.0 வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ள நிலையில், அதன் பலன்களை நிறுவனங்கள் முழுமையாக மக்களுக்கு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வரி குறைப்பு தொடர்பாக, தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு இதுவரை 3,000 புகார்கள் வந்துள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் துறைச் செயலாளர் நிதி காரே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்களுக்கு இதுவரை 3,000 நுகர்வோர் புகார்கள் வந்துள்ளன. இது குறித்து மேல் நடவடிக்கை எடுப்பதற்காக, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்திற்கு (CBIC) நாங்கள் இந்தப் புகார்களை அனுப்பி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், "குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களின் பலன்களை நுகர்வோருக்கு வழங்காமல், பல நிறுவனங்கள் தவறான தள்ளுபடிகள் மூலம் அவர்களை ஏமாற்றுவது குறித்து நுகர்வோர் விவகாரங்கள் துறை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. எனவே, பெறப்பட்ட புகார்களின் தெளிவான விவரங்களைப் பெறுவதற்காக, பல்வேறு துறைகளில் இருந்து வரும் புகார்களை கண்காணிக்க, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சாட்போட் (Chatbot) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், ஜிஎஸ்டி குறைப்பின் முழுப் பலனும் நுகர்வோரை சென்றடைவதை உறுதி செய்ய, அரசு தனது கண்காணிப்பு அமைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் ஒருங்கிணைந்த வரி முறைதான் சரக்கு மற்றும் சேவை வரி (GST). அண்மையில், பொதுமக்களின் வரி சுமையைக் குறைக்கும் நோக்கில், சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதங்களை மத்திய அரசு குறைத்தது. இந்த ஜிஎஸ்டி குறைப்புக்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த ஜிஎஸ்டி குறைப்பால், அத்தியாவசியப் பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள், வாகனங்கள் உள்ளிட்ட சுமார் 375 பொருட்களுக்கான விலை குறைந்துள்ளது. உதாரணத்திற்கு மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, டிஷ் வாஷர் ஆகிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதேபோல் வீடு கட்டுவதற்கான சிமெண்ட், எஃகு, ஓடுகள் மற்றும் பெயிண்ட் மீதான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக புதிய வீடு வாங்குவோரும் லட்சக்கணக்கில் பணத்தை சேமிக்க முடியும். மேலும், இருசக்கர வாகனங்கள், கார்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள், காஃபி தூள், சாக்லேட், பால் பொருட்கள் ஆகியவற்றின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால், பல வணிகர்கள் ஜிஎஸ்டி விகிதங்கள் குறைந்த பிறகும், அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக வழங்காமல், பழைய விலையையே தொடர்ந்து வழங்கி வருவதாக பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன. இதன் மூலம், அரசாங்கம் அளித்த வரி சலுகை வணிகர்களுக்கு மட்டுமே லாபமாக அமைந்து, வாடிக்கையாளர்களை சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வரி ஏய்ப்பைத் தடுத்து, உண்மையான பலன் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே, மத்திய அரசு தற்போது கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications