புதிய நிதியாண்டு ஏப்ரல் 1, 2024 முதல் தொடங்குகிறது, இது நம் அனைவரது பணப்பையையும் நேரடியாக பாதிக்கும் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. ஓய்வூதிய திட்டங்களில் மாற்றங்கள், கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றங்கள் என பல நிதி தொடர்பான விதிமுறைகள் இந்த மாதம் முதல் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப வருமான வரி விதிப்பில் இருந்து பல மாற்றங்கள் வருகிறது. வருமான வரி மாற்றங்கள் குறித்து தெரிந்துக்கொள்ள இதை கிளிக் ஏப்ரல் 1 முதல் வருமான வரியில் இத்தனை மாற்றங்களா.. முதல்ல இதை பாலோ பண்ணுங்க..!! செய்யவும், இதர முக்கியமான மாற்றங்களை இப்போது பார்ப்போம்.

புதிய தேசிய ஓய்வூதியத் திட்ட விதி: தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) ஒழுங்குபடுத்தும் அமைப்பு, பயனர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்த புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, CRA அமைப்பில் உள்நுழைய அனைத்து பயனர்களுக்கும் இரண்டு காரணி ஆதார் அங்கீகரிப்பு (2-FA) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தேசிய ஓய்வூதியத் திட்ட பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சமாகும்.
SBI கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம்: பல வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டு விதிமுறைகளை மாற்றியுள்ளன. அவற்றில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முதன்மையானது. பொதுத்துறையில் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி கிரெடிட் கார்ட் மூலம் வாடகை செலுத்தும் பரிவர்த்தனைகளில் ரிவார்டு புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது.
இந்த விதி மாற்றம் குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும், ஏப்ரல் 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த மாற்றம் AURUM, எஸ்.பி.ஐ கார்டு எலைட், எஸ்.பி.ஐ கார்டு எலைட் அட்வாண்டேஜ், எஸ்.பி.ஐ கார்டு பல்ஸ் மற்றும் சிம்பிளி கிளிக் எஸ்.பி.ஐ கார்டு போன்ற கிரெடிட் கார்டுகளுக்கு பொருந்தும்.
ICICI வங்கி கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம்: ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும் தங்கள் கிரெடிட் கார்டு சலுகைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இனி, முந்தைய காலாண்டில் ரூ.35,000 செலவழித்த கார்டு வைத்திருப்பவர்களுக்கு வங்கி இலவச விமான நிலைய லாஞ்ச் அணுகலை வழங்கும். கடந்த காலாண்டில் செலவழித்த தொகையைப் பொறுத்து அடுத்த காலாண்டில் இந்த சலுகை வழங்கப்படும்.
யெஸ் வங்கி கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம்: ஏப்ரல் 1, 2024 முதல், ஒரு காலாண்டில் ரூ.10,000 அல்லது அதற்கு மேல் செலவழிக்கும் யெஸ் வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இலவச உள்நாட்டு லாஞ்ச் அணுகலைப் பெற தகுதி பெறுவார்கள்.
5. ஓலா மணி வாலட் மாற்றம் : புதிய நிதியாண்டில் ஓலா மணி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி! ஓலா மணி நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு SMS மூலம் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி, நிறுவனம் தனது கணக்குகளை "சிறு வாலட்" (Small PPI) ஆக மாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஏப்ரல் 1, 2024 முதல் ஓலா மணி வாலட்டில் பணம் ஏற்றுவதற்கு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்.
அதிகபட்ச பணம் ஏற்றுதல்: புதிய விதிமுறைகளின்படி, ஒரு மாதத்திற்கு ரூ.10,000 மட்டுமே ஓலா மணி வாலட்டில் பணம் ஏற்ற முடியும். முன்னதாக, இந்த வரம்பு அதிகமாக இருந்தது.
பாதிப்பு யாருக்கு?: அதிக தொகையை ஓலா கேப் (Ola Cab) சவாரிகளுக்காக அல்லது பிற ஆன்லைன் கட்டணங்களுக்காக ஓலா மணி வாலட்டை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications