54 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அரசாங்கம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 53-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஜூன் 22-ஆம் தேதி அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி அன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில், பொதுவான வர்த்தக நடைமுறைகளின் காரணமாக குறைவாகவோ அல்லது செலுத்தாமலோ இருந்த ஜிஎஸ்டியை சட்டப்பூர்வமாக்க மத்திய ஜிஎஸ்டி சட்டத்தில் புதிய பிரிவு 11ஏ என்பதை சேர்க்க குழு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் சில வியாபாரிகள் தவறுதலாகவோ அல்லது வேறு காரணங்களால் குறைவான ஜிஎஸ்டி செலுத்தியிருந்தால், அதை சரிசெய்ய இந்த புதிய விதி (பிரிவு 11ஏ) கொண்டுவரப்பட உள்ளது.

மேலும், மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய மூன்று மாத கால அவகாசத்தை அரசு அறிவிக்கும் தேதியிலிருந்து தொடங்கும் வகையில் மத்திய ஜிஎஸ்டி சட்டம் 2017-ன் 112வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும் என குழு பரிந்துரைத்தது.
ஜிஎஸ்டி வசூல்: ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் 10.3% அதிகரித்து ரூ. 1.82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, இது முக்கியமாக உள்நாட்டு பொருட்கள் மற்றும் சேவை பரிவர்த்தனைகள் மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கிறது. ஜூலை 1-ஆம் தேதி, 2017 முதல்.. அதாவது ஜிஎஸ்டி முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இது 3-வது அதிகபட்ச மாதாந்திர வசூலாகும்.
ஜூலை மாதத்தில் மொத்தம் ரூ.16,283 கோடி ரீஃபண்டு திருப்பிச் செலுத்தப்பட்டது. இந்த ரீஃபண்டுகளைக் கணக்கிட்ட பிறகு, நிகர ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.66 லட்சம் கோடியாக உள்ளது. இது சுமார் 14.4% வளர்ச்சியை சுட்டிக் காட்டுகிறது.
மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,82,075 கோடியை எட்டியது, இதில் மத்திய அரசு மூலம் வசூல் செய்ப்பட்ட ஜிஎஸ்டி ரூ.32,386 கோடி, மாநில அரசு மூலம் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி ரூ.40,289 கோடி, மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூல் ரூ.96,447 கோடி, இழப்பீட்டு கட்டணமாக ரூ.12,953 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜிஎஸ்டி வரி தொடர்பான முக்கிய விவகாரங்களை விவாதிக்க 54வது ஜிஎஸ்டி குழு கூட்டம் செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ளது. வரி விகிதங்கள், வரி எளிமைப்படுத்தல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்த தீர்வுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications