டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் நடைபெறும் 55வது GST கவுன்சில் கூட்டத்தில் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், லைப் ஸ்டைல் பொருட்கள் என பலவற்றின் மீதான வரியை மறுசீரமைப்பு செய்யும் முடிவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் உள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த சில வருடங்களாக இருக்கும் மிக முக்கியமான விவாத பொருள் என்றால் அது, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்சி வரம்புக்குள் கொண்டு வருவது தான். மத்திய அரசும், மாநில அரசும் வரி வருமானத்திற்காகச் சாமானிய மக்கள் தினசரி அடிப்படையில் பயன்படுத்தும் எரிபொருள் மீது அதிகப்படியான வரியை விதித்து வருகிறது.

இந்த நிலையை மாற்ற பெட்ரோல், டீசலை ஜிஎஸ்சி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டாலும், மாநில அரசுகளுக்கு எரிபொருள் விற்பனை வாயிலாக அதிகப்படியான வருமானம் கிடைப்பதாலும், மத்திய அரசு ஜிஎஸ்டி வரி பங்கீட்டை மாநில அரசுகளுக்கான அளவீட்டை அதிகரிக்க மறுப்பதாலும் பெட்ரோல், டீசல் உட்பட அனைத்தும் ஜிஎஸ்டி வரி கட்டமைப்புக்கு வெளியிலேயே உள்ளது.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சகம் எரிபொருளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரும் திட்டத்தின் முதல் படியாக விமானத் துறையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் விமான எரிபொருள் (ஏடிஎப்) ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்படுவது குறித்த திட்டத்தை விவாதிக்கப்படவுள்ளது. டிசம்பர் 21 அன்று நடைபெறவுள்ள 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முக்கியமான திட்டம் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, விமான எரிபொருள் (ATF) மீது மதிப்புக் கூட்டு வரி (VAT) மற்றும் மத்திய கலால் வரி என இரு வரிவிதிப்பு முறை நடைமுறையில் உள்ளது. இந்த அடுக்கடுக்கான வரிவிதிப்பு முறை விமான எரிபொருளின் ஒட்டுமொத்த விலையை அதிகரிக்கிறது, இதனால் விமான நிறுவனங்களின் லாபத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, இறுதியில் அது விமான பயணிகளின் தலைில் விமான கட்டணமாக விழுகிறது.
தற்போதைய கட்டமைப்பில் இருக்கும் முக்கிய சவால் என்னவென்றால், விமான எரிபொருள் பயன்படுத்தும் எந்த நிறுவனங்களும் உள்ளீட்டு வரி விலக்கு (ITC) பெற முடியாமல் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் விமான எரிபொருள் ஜிஎஸ்டி வரம்பிற்குள் இல்லாதது தான்.
இன்புட் டாக்ஸ் கிரெடிட் மூலம் கிடைக்கும் எவ்விதமான பலன்களும் விமான எரிபொருள் வாங்கும் விமான நிறுவனங்களால் பெற முடியவில்லை. இதனால் விமான நிறுவனங்களின் லாபத்தில் பெரும் சுமை அதிகரிக்கிறது. ஏடிஎஃபை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவருவதன் மூலம், அரசு வரிவிதிப்பு கட்டமைப்பை எளிமைப்படுத்தி, அடுக்கடுக்கான வரி தாக்கத்தை நீக்க முடியும். இதன் மூலம் விமான பயணம் மேலும் மலிவானதாகும்.
இந்த பயணம் வெற்றிகரமாக முடிந்தால் பெட்ரோல், டீசல் அடுத்தகட்டமாக ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.
2025 ஆம் ஆண்டில் மத்திய அரசிடம் டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு, பல மாநிலங்களுடன் நேரடியாக ஆலோசனை செய்து 16-வது பைனான்ஸ் கமிஷன் அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ள நிலையில் இந்த மாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அரவிந்த் பனகாரியா சமர்ப்பிக்கும் வரி பகிர்வு குறித்த பரிந்துரைகள் 2026-27 நிதியாண்டு முதல் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications