தங்கம் விலை 10% உயர்ந்தால் இந்திய மக்களுக்கு ரூ.3817200 கோடி கிடைக்கும்.. அடித்து சொல்லும் ஜெப்ரீஸ்.. எப்படி?

தங்கம் விலை இன்று சென்னை ரீடைல் சந்தையில் மிகப்பெரிய அளவில் குறைந்திருந்துள்ளது, ஆனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் உயர்வை காணும் என்பதை தொடர்ந்து அதிகரித்து வரும் கடன், பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டு உள்ள மந்த நிலை ஆகியவற்றின் மூலம் தங்கம் முக்கிய சொத்தாகவும், விலைமதிப்பு மிக்க சொத்தாக மாறும் என தாமஸ் கப்லான், ராபெர்ட் கியோசாகி தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தான் ஜெப்ரீஸ் நிறுவனம் இந்தியாவின் தங்க சந்தை குறித்தும், தங்க இருப்பு குறித்தும் மிக முக்கியமான கருத்தை விடுத்துள்ளது.

தங்கம் விலை 10% உயர்ந்தால் இந்திய மக்களுக்கு ரூ.3817200 கோடி கிடைக்கும்.. அடித்து சொல்லும் ஜெப்ரீஸ்.. எப்படி?

தங்கம் விலை இன்று சென்னை ரீடைல் சந்தையில் 322 ரூபாய் குறைந்து தற்போது 15,824 ரூபாய் (1 கிராம் 24 கேரட்) அளவில் இருந்து 10 சதவீதம் உயர்ந்தால் இந்திய மக்களிடம் இருக்கும் 25000 முதல் 34600 டன் தங்கம் மூலம் அவர்களின் சொத்து மதிப்பு குறைந்தபட்சம் 400 பில்லியன் டாலர் அதாவது 38.17 லட்சம் கோடி ரூபாய் அளவில் உயரும் என தெரிவித்துள்ளது.

இந்த மதிப்பு உயர்வு மூலம் இந்திய தங்க நகை கடன் சந்தை 20-25 பில்லியன் டாலர் மதிப்பிலான கூடுதல் வர்த்தகத்தை பெறும் என தெரிவித்துள்ளது.

இதேவேளையில் இந்திய மக்களிடம் இருக்கும் தங்கத்தை டார்கெட்டாக வைத்து பல முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் தங்க நகை கடன் வர்த்தகத்தை துவங்கியிருக்கும் வேளையில் சர்வதேச முதலீட்டு நிறுவனமான ஜெப்ரீஸ் தனது இந்திய மாடல் போர்ட்போலியோவில் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தை சேர்த்துள்ளது.

மேலும் தங்கம் விலை உயர்வால் அதிகம் பலன் அடையும் நிறுவனங்கள் பட்டியலில் டைட்டன் கல்யாண் ஜூவல்லர்ஸ், எம்சிஎக்ஸ், ஐஐஎப்எல் பைனான்ஸ், முத்தூட் பைனான்ஸ் ஆகியவற்றை முக்கிய நிறுவனமாக பார்த்துள்ளது.

தங்கம் என்பது இந்திய குடும்பங்களின் முக்கிய சொத்தாகவும், பலமாகவும் காலம் காலமாக விளங்கினாலும், தற்போது தங்கம் விலை உயர்வால் இது எத்தகைய பலம் என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதன் அடிப்படையில் பாத்தால் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் தங்கத்தை தாண்டி இந்திய மக்களிடம் சுமார் 25000 முதல் 35000 டன் வரையிலான தங்கம் இருப்பதாக கணிக்கப்படுகிறது.

இதில் குறைந்த பட்சம் 25000 டன் தங்கம் கணக்கிட்டால் கூட இன்றைய விலை மதிப்பில் இது கிட்டத்தட்ட 4 டிரில்லியன் டாலர் (4 லட்சம் கோடி அமெரிக்க டாலர்) இதில் 10 சதவீதம் விலை உயர்ந்தால் 400 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உயரும், இது 38 லட்சம் கோடி ரூபாய். இந்த 4 டிரில்லியன் டாலர் என்பது வங்கி வைப்பு நிதியில் இருக்கும் பணத்தை காட்டிலும் 2 மடங்கு அதிகம்.

மேலும் இந்திய குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பில் தங்கம் மட்டும் சுமார் 25 சதவீத பங்கை கொண்டு உள்ளது. அதேவேளையில் சர்வதேச முதலீட்டு நிறுவனமான Jefferies இந்தியாவும், இந்தியர்களும் தங்களிடம் இருக்கும் தங்கத்தை மிகவும் குறைந்து மதிப்பிடுகின்றனர் என தெரிவித்துள்ளது.

பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இந்த செய்தியில் கவனிக்க வேண்டியது என்னவென்றாஸ் Jefferies தனது இந்திய போர்ட்போலியோவில் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தை சேர்த்துள்ளது மட்டும் அல்லாமல் சுமார் 3 சதவீத பங்கை கொண்டு உள்ளது என்பது தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+