பெய்ஜிங், சீனா: சீனா நாட்டில் திருமணம் செய்து இரண்டு மாதங்களிலேயே விவாகரத்து செய்து பணம் சம்பாதிக்கும் மோசடி அதிகரித்து வருகிறது.சீனாவில் தற்போது திருமணம் நடைபெறும் விகிதங்கள் பெருமளவில் குறைந்து விட்டதாக அந்நாட்டு அரசு வெளியிடும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு சீன இளைஞர்கள் போதிய வருமானம் இல்லாமல் இருப்பது, வாழ்க்கை செலவுகள் உயர்ந்தது, செட்டிலாகிவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என நினைப்பது ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது.

இதனிடையே சில மோசடி கும்பல்களை சேர்ந்தவர்கள் இவ்வாறு இளைஞர்களுக்கு திருமணத்திற்கு வரன் பார்த்து தருவதாக போலியாக இணையதளங்களை உருவாக்கி அதன் மூலம் இவர்கள் ஏற்பாடு செய்த பெண்களையே திருமணம் செய்து வைத்து விரைவில் அவர்களை விவாகரத்தும் செய்ய வைத்து மோசடி செய்கிறார்களாம். அந்த விவாகரத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை பிரித்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது.
அண்மைக்காலமாகவே சீனாவில் இத்தகைய மோசடிகள் அதிகரித்து வருகிறது என சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு நடக்கும் திருமணங்களை அந்நாட்டில் "flash marriages" என அழைக்கிறார்களாம். இதன்படி சீனாவின் குய்யாங்கு பகுதியில் மட்டும் 180 புகார்கள் வந்திருக்கின்றன. இதில் பாதிக்கப்பட்ட மணமகன்கள் பலரும் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருப்பதாக கூறுகின்றனர்.
ஒரு குறிப்பிட்ட இணையதளமானது திருமண வயதில் இருக்கும் வரன் தேடும் இளைஞர்களை அணுகி அவர்களுக்கு வரன் பார்த்து தருவதாக உறுதியளிப்பார்களாம். இதனை அடுத்து இவர்களே ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து அந்த குறிப்பிட்ட நபருக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பார்களாம்.
பின்னர் இந்த பெண்கள் அந்த ஆண்களை மன அழுத்தத்திற்கு உண்டாக்கி அடிக்கடி சண்டை போட்டு திருமணம் ஆன இரண்டு மூன்று மாதங்களில் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்ய வைத்து விடுவார்களாம்.
இந்த விவாகரத்தில் அந்த பெண்களுக்கு குறிப்பிட்ட பணம் செட்டில்மெண்டாக கிடைக்குமாம் அதனை அவர்களும் அந்த ஏஜெண்டுகளும் பிரித்து கொள்கின்றனர். இப்படி ஒரு மோசடி சீனாவை தற்போது ஆட்டிப்படைத்து வருகிறது. இவ்வாறு திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெறும் பெண்களுக்கு இத்தகைய இணையதளங்கள் 3 லட்சம் யுவான்களை பரிசாக வழங்குகின்றனவாம். ஓர் ஆண்டில் இவர்கள் இவ்வாறு 40 முதல் 50 திருமணங்களை மேற்கொண்டு மோசடி செய்வது தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே பொருளாதார ரீதியாக திருமணத்தை தள்ளி போடும் இளைஞர்களுக்கு இத்தகைய மோசடிகள் திருமணத்தின் மீதான நம்பிக்கையையே இழக்க செய்கின்றன என புலம்புகிறார்கள்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications