யூடியூப், முகநூல் மற்றும் சமூக ஊடகங்களில் இயற்கை விவசாயம் குறித்த தகவல்கள் பெருகி வருவதும், நோய் எதிர்ப்பு சக்தி குறித்த விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் இயற்கை வாழ்வியல் முறைகள் மீதான ஆர்வத்தை உருவாக்கி வருகிறது. இதன் விளைவாக, நகரங்களில் அதிகமானோர் தங்கள் வீட்டுத் தளங்களில் சின்னச் சின்ன மாடித் தோட்டங்களை அமைக்கத் தொடங்கியுள்ளனர்.
பொதுவாக, வீட்டுக்கே தேவையான காய்கறிகள் மற்றும் கீரைகளை மக்கள் கடைகளில் இருந்து வாங்கி வந்தாலும், தற்போது பலர் தங்களாகவே இந்தப் பொருட்களை இயற்கையான முறையில் வீடுகளில் வளர்க்க முயற்சி செய்கின்றனர். சூரிய ஒளி கிடைக்கும் மாடிகளில் பெரிய பைகளில் மண்ணை நிரப்பி, ஹார்மோன் இன்றி உரங்களோடு பசுமைச் செடிகளை வளர்க்கும் இந்த முயற்சிகள், நகர வாசிகளிடையே தற்சார்பு வாழ்க்கை மீதான விருப்பத்தை காட்டுகிறது.

சிறிய அளவிலான இந்த தோட்டங்கள், குடும்பத்திற்கே தேவையான கீரைகள், தக்காளி, புடலங்காய், முருங்கை, பீர்க்கங்காய் உள்ளிட்ட பலவற்றையும் விளைய வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளன. ஒருபுறம் ஆரோக்கியம், மறுபுறம் செலவுக் குறைப்பு என்பதால், இத்தகைய முயற்சிகள் நகரப் பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.
இந்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு மானியத்துடன் மாடித் தோட்ட திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், "மாடித் தோட்டம் கிட்" வழங்கப்படுகிறது. இதில், காய்கறி விதைகள், விதைப்பெட்டி, இயற்கை உரங்கள், கொள்கலன்கள் உள்ளிட்ட தோட்டம் அமைப்பதற்கான அனைத்து தேவையான பொருட்களும் அடங்கியுள்ளன. இத்திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களையும், தொழில்நுட்ப ஆலோசனைகளையும் பெற, ஏராளமானோர் தங்களது மாவட்டத்திற்குள் உள்ள தமிழக தோட்டக்கலைத் துறையை அணுகி வருகிறார்கள்.
அந்த வகையில், கேரளாவின் சாலக்குடி நகராட்சி, தற்பொழுது ஒரு மென்மையான பசுமைப் புரட்சியை எதிர்கொண்டு வருகிறது. இந்த நகரத்தில், சுமார் 100 மொட்டை மாடிகளில் தக்காளி, புடலங்காய், பாகற்காய், மிளகாய் மற்றும் பல வகை காய்கறிகளால் நிரம்பி பசுமையான தோட்டங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. இந்த மாற்றம் வெறும் இயற்கை வேளாண் முயற்சியாக மட்டுமின்றி, சமூக சக்தியால் இயக்கப்படும் ஒரு சிறப்பான நிகழ்வாகவும் அமைந்துள்ளது. மாநில வறுமை ஒழிப்பு மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பு திட்டமான குடும்பஸ்ரீயின் ஆதரவுடன், 440 சுற்றுப்புறக் குழுக்கள் இணைந்து இந்த பசுமையை நகரம் முழுவதும் பரப்புகின்றன.
இதுவரை, 2,000-க்கும் மேற்பட்ட பைகள் (Growbag) மற்றும் மரக்கன்றுகள் வீட்டுத் தோட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ளன. மாடிகள் மட்டுமல்ல; பூங்காக்கள், பொது மைதானங்கள் மற்றும் பயனின்றி கிடந்த தரிசு நிலங்களும் இப்போது இயற்கையின் எழிற்பாடுகளை கட்டி வளர்க்கின்றன. சமூக ஈடுபாட்டின் ஒளிவிளக்காக, விஜயராகவபுரத்தில் உள்ள கஸ்தூரிபா மையம் குறிப்பிடத்தக்கது. இங்கே உள்ள தன்னார்வலர்கள், பயன்பாடின்றி கிடந்த நிலத்தை மீட்டெடுத்து ஒரு வாழ்வுள்ள சமூகத் தோட்டமாக மாற்றியுள்ளனர்.
தொழில்நுட்பம், பெரிய முதலீடுகள் இல்லாமல், வெறும் ₹1.85 லட்சம் நிதியுடன் இந்த நகரம் உணவுப் பாதுகாப்பு, தன்னம்பிக்கை மற்றும் சூழலியல் விழிப்புணர்வு ஆகியவற்றின் மீதான தனது பொறுப்பை நிரூபிக்கிறது. "ஒன்றாக வளர விருப்பம் இருக்க வேண்டும்" என்பதே இப்பணியின் அடிப்படை. இது வெறும் காய்கறி வளர்ப்பைப் பற்றியதல்ல. இது தன் வருமான மரியாதையை, நம்பிக்கையை, மற்றும் ஒரு சமூகமாக உணவைப் பாதுகாப்பதற்கான முயற்சியாகும்.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications