ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சியும், பெண்களின் உரிமை மற்றும் சுதந்திரம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தாலிபான்கள் கைப்பற்றி, பல வருடங்களாகப் பல நாடுகளின் உதவியால் உருவான ஆட்சி மொத்தமாகக் கவிழ்ந்தது. இதேவேளையில் அந்நாட்டின் வளர்ச்சி, பொருளாதார சீர்திருத்தம், பெண்கள் முன்னேற்றம் அனைத்தும் தூள்களாக உடைந்தது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 450 நாட்களுக்கு மேலாக பெண்கள் பல்கலைக்கழக கல்வி தடை செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படுவது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்று TOLO செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் கடும் பாதிப்பு அடைந்துள்ள பெண் மாணவிகள், தங்கள் கல்வித் தடை நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தலிபான் தலைமையிலான தற்காலிக அரசாங்கத்தை வலியுறுத்திப் பேசிய கதீஜா என்ற மாணவி, "பெண்களின் கல்வி என்பது மிகவும் முக்கியமானது. அது குடும்பம் முழுவதின் கல்வியையும் வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. இதை புறக்கணிப்பது சமூகத்தின் கல்வி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கும்" என்று கூறியதாக டோலோ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
கதீஜா-வின் கருத்தை ஆதரித்துப் பேசிய நாரோ என்ற மற்றொரு மாணவி, "பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளின் கதவுகளைப் பெண்களுக்குத் திறக்கும்படி அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால் வலுவான மற்றும் முற்போக்கான சமூகத்தைக் கட்டமைப்பதற்குப் பெண்களின் கல்வி அவசியம்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து தலிபான்களிடமிருந்து எந்த புதிய அறிவிப்பும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்றாலும், பெண்களின் கல்வி உரிமை குறித்து தற்காலிக அரசு முன்னர் அளித்த உத்தரவாதங்கள் இந்தி செய்தி மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் ஞாபகப்படுத்தப்பட்டு உள்ளது.
தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஆறாம் வகுப்புக்கு மேல் பெண்கள் பள்ளி செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஒரு வருடத்திற்கும் மேலாக, பெண் மாணவிகளுக்குப் பல்கலைக்கழக கல்வியும் மறுக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications