சில காலமாக அடிக்கடி மோசடி சம்பவங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். இதில் விவரம் தெரியாதவர்களை விட நன்கு படித்த நபர்களே அதிகம் ஏமாறுகின்றனர். அப்படித்தான் அகமதாபாதை சேர்ந்த 26 வயதான சாப்ட்வேர் டெவலப்பர் ஒருவர் மோசடிக்கு பலியாகி ரூ. 1 லட்ச ரூபாயை இழந்துள்ளார். இந்தச் சம்பவம் எப்படி நிகழ்ந்தது? என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
கட்லோடியாவின் சிந்துபவன் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் ஏமாற்றப்பட்ட இந்த இளைஞர். ஒரு நாள் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு தானியங்கி அழைப்பு வந்துள்ளது. அதில் டெலிவரி செய்யப்படாத கொரியர் அந்த இளைஞரின் பெயரில் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் இளைஞரிடம் 1-ஐ பிரஸ் செய்யுமாறு கூறப்பட்டது. இதை நம்பிய அந்த இளைஞரும் 1-ஐ பிரஸ் செய்துள்ளார்.

அதன் பிறகு அழைப்பு ஒரு நபரிடம் மாற்றப்பட்டது. அந்த நபர் பாதிக்கப்பட்ட இளைஞரின் ஆதார் விவரங்களை துல்லியமாக கூறியுள்ளார். இதை கேட்ட அந்த இளைஞருக்கு ஷாக் ஆகியுள்ளது. அப்போதுதான் தனக்கு வந்துள்ள கால் உண்மை என்று பாதிக்கப்பட்ட இளைஞர் நம்பியுள்ளார்.
இப்படியே பேசிக் கொண்டிருந்த மோசடிக்காரர் சுனில் தத் என்ற போலி சைபர் க்ரைம் அதிகாரிக்கு போனை மாற்றியுள்ளார். இளைஞரின் பெயரில் வந்திருக்கும் பார்சலில் 6 வெவ்வேறு பேங்குகளின் கிரெடிட் கார்டுகள் இருப்பதாகத் தெரிவித்தார். அதோடு இது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறி அந்த இளைஞரை டிஜிட்டல் அரெஸ்ட்டில் வைப்பதாகவும் தெரிவித்தார்.
அனைத்து செயல்முறையும் உண்மையானது என்பது போல காண்பிப்பதற்காக அமலாக்க இயக்குனரகத்தின் மூலம் பெறப்பட்ட அரெஸ்ட் வாரண்டை காண்பித்துள்ளார். இதையெல்லாம் பார்த்த அந்த இளைஞர் பயந்து போய் மோசடிக்காரர்கள் சொன்ன விஷயங்களுக்கெல்லாம் இணங்கியுள்ளார்.
மோசடிக்காரர்களின் அறிவுறுத்தலின்படி அந்த இளைஞர் ரூ.1 லட்சத்தை தனது வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கு மாற்றியுள்ளார். பணத்தை மாற்றிய பின்னர் தொடர்பு கொண்ட இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து கொண்ட அந்த இளைஞர் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
இத்தகைய மோசடிகளில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?:
அழைப்பாளரின் அடையாளத்தைச் சரி பாருங்கள்: உங்கள் தனிப்பட்ட விவரங்கள் சிலவற்றை மோசடிக்காரர்கள் கொண்டிருந்தால் ஒருபோதும் அவற்றை நம்ப வேண்டாம். எந்த ஒரு அரசாங்க அதிகாரியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களிடம் பணம் கேட்க மாட்டார்கள்
தானியங்கி அழைப்புகளில் பட்டன்களை அழுத்துவதைத் தவிர்க்கவும்: உங்களுக்கு தானியங்கி அழைப்புகள் வந்தால் அவற்றின் வழிமுறைகளை பின்பற்றுவதற்கு முன்பு உண்மையான அதிகாரப்பூர்வ எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளதா? என்பதை சரி பாருங்கள்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications