சென்னை: நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் 1.3 சதவிதம் அதிகரித்துள்ளது. இது மார்ச் மாதத்தில் 0.53 சதவீதமாக இருந்தது.
மார்ச் மாதத்தில் 0.53 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் , ஏப்ரல் மாதத்தில் 1.3 சதவிதம் அதிகரித்துள்ளது. உணவு மற்றும் எரிபொருள் விலைகளால், இந்த உயர்வு ஏற்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.

அரிசி, பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளின் பணவீக்கமும் அதிகரித்துள்ளன. உணவுப்பிரிவு பணவீக்கம், மார்ச் மாதம் 8.52 சதவீதமாக இருந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் 8.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு எரிபொருள் பணவீக்கத்திற்கான காரணமாக உள்ளது. புவிசார் பதட்டங்கள் காரணமாக இனிவரும் நாட்களிலும் பணவீக்கத்தின் விகிதம் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை அன்று வெளியிடப்பட்ட தரவுகளின் படி, உணவு பணவீக்கம் மற்றும் எரிபொருள், இந்த மொத்த விலை பணவீக்கத்தைக், கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது கடந்த மார்ச் மாதம் இது 0.53 சதவீதமாக இருந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் 1.26 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மொத்த விலைக் குறியீடு 0.8 சதவீதம் அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை 2.7 சதவீதம் உயர்ந்துள்ளது. உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுவே மொத்த விலை பணவீக்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு அதிகரிப்புக்கான காரணமாக உள்ளது.
அரிசி, பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் தொடர்ந்து இரட்டை இலக்க பணவீக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்ததால், உணவுப்பிரிவு பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில், கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு 8.70 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நெற்கதிர்களின் விலை ஏப்ரல் மாதத்தில் 12.03 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 11.74 சதவீதமாக இருந்தது. அதேபோல காய்கறிகளின் பணவீக்கமும் மார்ச் மாதத்தில் 19.5 சதவீதத்திலிருந்து, ஏப்ரல் மாதத்தில் 23.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
காய்கறிகளில், குறிப்பாக உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலை கடந்த மார்ச் மாதத்தில் 53 சதவீதம் மற்றும் 57 சதவீதமாக இருந்தது. ஆனால், ஏப்ரல் மாதத்தில் அதன் விலை 72 சதவீதம் மற்றும் 59.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புவிசார் அரசியல் பதட்டங்களின் காரணமாக இனி வரும் மாதங்களிலும் மொத்த பண வீக்கத்தின் விகிதம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏப்ரல் மாதத்தில் பேரலுக்கு $ 90 டாலரைத் தொட்டது. இதுவும் மொத்த விலை பணவீக்கம் அதிகரிக்கக் காரணமானது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications