உச்சத்தில் மொத்த விலை பணவீக்கம்.. காய்கறிகள் பழங்கள் விலை ஏறப்போகுது!

சென்னை: நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் 1.3 சதவிதம் அதிகரித்துள்ளது. இது மார்ச் மாதத்தில் 0.53 சதவீதமாக இருந்தது.

மார்ச் மாதத்தில் 0.53 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் , ஏப்ரல் மாதத்தில் 1.3 சதவிதம் அதிகரித்துள்ளது. உணவு மற்றும் எரிபொருள் விலைகளால், இந்த உயர்வு ஏற்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.

உச்சத்தில் மொத்த விலை பணவீக்கம்.. காய்கறிகள் பழங்கள் விலை ஏறப்போகுது!

அரிசி, பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளின் பணவீக்கமும் அதிகரித்துள்ளன. உணவுப்பிரிவு பணவீக்கம், மார்ச் மாதம் 8.52 சதவீதமாக இருந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் 8.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு எரிபொருள் பணவீக்கத்திற்கான காரணமாக உள்ளது. புவிசார் பதட்டங்கள் காரணமாக இனிவரும் நாட்களிலும் பணவீக்கத்தின் விகிதம் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

செவ்வாய்க்கிழமை அன்று வெளியிடப்பட்ட தரவுகளின் படி, உணவு பணவீக்கம் மற்றும் எரிபொருள், இந்த மொத்த விலை பணவீக்கத்தைக், கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது கடந்த மார்ச் மாதம் இது 0.53 சதவீதமாக இருந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் 1.26 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மொத்த விலைக் குறியீடு 0.8 சதவீதம் அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை 2.7 சதவீதம் உயர்ந்துள்ளது. உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுவே மொத்த விலை பணவீக்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு அதிகரிப்புக்கான காரணமாக உள்ளது.

அரிசி, பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் தொடர்ந்து இரட்டை இலக்க பணவீக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்ததால், உணவுப்பிரிவு பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில், கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு 8.70 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நெற்கதிர்களின் விலை ஏப்ரல் மாதத்தில் 12.03 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 11.74 சதவீதமாக இருந்தது. அதேபோல காய்கறிகளின் பணவீக்கமும் மார்ச் மாதத்தில் 19.5 சதவீதத்திலிருந்து, ஏப்ரல் மாதத்தில் 23.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

காய்கறிகளில், குறிப்பாக உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலை கடந்த மார்ச் மாதத்தில் 53 சதவீதம் மற்றும் 57 சதவீதமாக இருந்தது. ஆனால், ஏப்ரல் மாதத்தில் அதன் விலை 72 சதவீதம் மற்றும் 59.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புவிசார் அரசியல் பதட்டங்களின் காரணமாக இனி வரும் மாதங்களிலும் மொத்த பண வீக்கத்தின் விகிதம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏப்ரல் மாதத்தில் பேரலுக்கு $ 90 டாலரைத் தொட்டது. இதுவும் மொத்த விலை பணவீக்கம் அதிகரிக்கக் காரணமானது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+