வாடகைக்கு வீடு வேண்டும் என்றால் நாம் தெரு தெருவாக சென்று எங்கெல்லாம் டூலெட் போர்டு போட்டு இருக்கிறது என பார்த்து விசாரிப்போம். ஆனால் இப்போதெல்லாம் அந்த அவசியம் கிடையாது. பல்வேறு செயலிகள் மற்றும் இணையதளங்கள் வாயிலாகவே நாம் வாடகைக்கு வீடு தேடிக் கொள்ள முடியும்.
நம் வீட்டில் அமர்ந்தபடியே எந்த பகுதியில் எவ்வளவு வாடகையில் நமக்கு வீடு வேண்டும் என்பதை உள்ளீடு செய்தாலே குறிப்பிட்ட அந்த ஏரியாவில் அந்த குறிப்பிட்ட தொகைக்கு எத்தனை வீடுகள் வாடகைக்கு கிடைக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம், வீட்டின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இணையதளங்களே நமக்கு காட்டிவிடும். அந்த வகையில் வாடகைக்கு வீடு தேடுவது எளிமையானதாக மாறியிருக்கிறது. அதே வேளையில் இதனை வைத்து தற்போது மோசடி செய்வதும் அதிகரித்து இருக்கிறதாம்.

பெங்களூருவை சேர்ந்த ஒரு நபர் ஒரு பிரபலமான ஆன்லைன் தளம் வழியாக வாடகைக்கு வீடு தேட முயற்சித்த போது தன்னை எப்படி மோசடியாளர்கள் ஏமாற்ற முற்பட்டனர். அதிலிருந்து தான் எப்படி தப்பித்தேன் என்பது குறித்து விரிவாக பதிவு செய்திருக்கிறார். பெங்களூருவின் வாடகை மோசடி என்ற பெயரில் பதிவு செய்திருக்கும் அவர் புகழ்பெற்ற இணையதளங்கள் மற்றும் செயலிகள் வாயிலாக தற்போது மோசடியாளர்கள் புதுயுக்தியை கையாள தொடங்கி இருக்கின்றனர் எனக் கூறியிருக்கிறார் .
ஜே.பி நகர் பகுதியில் இரண்டு படுக்கை அறை கொண்ட வீடினை தான் தேடி வந்ததாகவும் அப்போது உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கொண்டு இரண்டு படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு குறித்த ஒரு பதிவினை பார்த்ததாகவும் அதனை கிளிக் செய்த போது வாடகை 15000 ரூபாய் என போட்டு இருந்ததாகவும் கூறியுள்ளார். ஜேபிநகர் பகுதியில் இரண்டு படுக்கையறை கொண்ட வீடு வெறும் 15000 ரூபாய் தானா என அதை பார்த்த உடனே அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சரி என்னதான் என பார்ப்போம் என அந்த பதிவை கிளிக் செய்து சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு இருக்கிறார் . அப்போது குறிப்பிட்ட அந்த நபர் 15 ஆயிரம் ரூபாய் வாடகை , உங்களுக்கு வீட்டிலேயே டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட அனைத்தும் இருக்கும் என கூறினாராம். இதைக் கேட்ட உடனே இந்த நபருக்கு இன்னும் சந்தேகம் வலுத்து இருக்கிறது.
வீட்டு உரிமையாளர் என பேசிய நபர் எங்களுடையது ஒரு கேட்டட் சொசைட்டி இங்கே நீங்கள் நேரடியாக வந்து வீட்டை பார்வையிட்டு விட முடியாது , அதற்கென ஒரு ஐடி கார்டு உருவாக்கி உங்களுக்கு நான் தர வேண்டும் அப்பொழுதுதான் உங்களை உள்ளே விடுவார்கள் என கூறினாராம். இந்த ஐடி கார்டை பெறுவதற்கு உங்களுடைய புகைப்படம் மற்றும் ஏதேனும் ஒரு அரசு அடையாள அட்டை தேவை என கூறினாராம். இதனை அடுத்து வேறு என்ன வேண்டும் என கேட்டதற்கு நீங்கள் எனக்கு 2500 ரூபாய் பணம் அனுப்ப வேண்டும் நீங்கள் வீட்டை வந்து பார்த்து சென்றவுடன் நாங்கள் அதனை உங்களுக்கு திரும்ப அனுப்பி விடுவேன் இது அந்த ஐடி கார்டை உருவாக்குவதற்கான பணம் எனக் கூறினாராம்.
அப்பொழுதுதான் இவருக்கு அவர்கள் குறித்து அனைத்து விவரங்களும் தெரிய வந்திருக்கிறது. நம்மிடம் 2500 ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு அவர்கள் தப்பி சென்று விடுவார்கள் நீங்கள் வீட்டை பார்க்கலாம் என அந்த இடத்திற்கு போனால் உங்களை உள்ளே விட மாட்டார்கள் , உங்களுக்கென எந்த ஒரு ஐடி கார்டையும் கொடுக்க மாட்டார்கள் . அது தவிர உங்களுடைய அடையாள அட்டையை பகிர்ந்து இருக்கிறீர்கள் என்பதால் அதை வைத்து அவர்கள் எந்த மோசடியில் வேண்டுமானாலும் ஈடுபடலாம் என கூறி இருக்கிறார்.
எனவே ஆன்லைன் தளங்களில் நீங்கள் வீடு பார்க்கும் போது ஒரு பிரதானமான பகுதியில் குறைந்த வாடகையில் வீடு வழங்குகிறார்கள் அல்லது இதுபோல உங்களை வீடு பார்க்க வருவதற்கே அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கேட்கிறார்கள் முன்கூட்டியே ஒரு பணத்தை கொடுங்கள் என கூறுகிறார்கள் என்றால் உஷாராகிவிடுங்கள். இவை அனைத்தும் மோசடி இதனை நம்பாதீர்கள் தற்போது மோசடியாளர்கள் இதுபோன்ற செயலிகள் வாயிலாக தான் மக்களை ஏமாற்றுகிறார்கள் என கூறியிருக்கிறார். அவருடைய இந்த பதிவு பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பதிவாக அமைந்திருக்கிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications