டெல்லி ஐ.ஐ.டி. பட்டதாரியான அஷ்னீர் குரோவர் 2018ல் நிதி தொழில்நுட்ப நிறுவனமான பாரத்பே நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்து யுனிகார்ன் நிறுவன நிலையை எட்டியது.
செக்யோயா கேப்பிடல் போன்ற பல வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் போட்டி போட்டு பாரத்பே நிறுவனத்தில முதலீடு செய்துள்ளன. 4 ஆண்டுகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் போய்கொண்டிருந்த நிறுவனம் முதல் முறையாக கடந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கியது.

தனக்கும் தனது மனைவி மாதுரி ஜெயின் குரோவருக்கும் நைகா ஐ.பி.ஓ.வுக்கான ஒதுக்கீடு மற்றும் நிதியை பெற தவறியதற்காக கோடக் குழும ஊழியரை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் மற்றும் மிரட்டல் விடுத்ததாகவும் பாரத்பே நிறுவனர் அஷ்னீர் குரோவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து குரோவர் தானாக முன்வந்து விடுப்பு எடுத்தார் பின்னர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த சூழ்நிலையில், அவரது மனைவியும், முன்னாள் கட்டுப்பாட்டு தலைவருமான மாதுரி ஜெயின், நிறுவன நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நீக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு பாரத்பே நிறுவனம் அஷ்னீர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவில் மோசடி, கிரிமினல் நம்பிக்கை மீறல் உள்பட 17 பிரிவுகளின் கீழ் கிரிமினல் புகாரை பதிவு செய்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குரோவர் தம்பதிகள் 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம்.
மேலும், அஷ்னீர் குரோவர், அவரது மனைவி மாதுரி ஜெயின் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக, நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக கூறி ரூ.88 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாரத்பே நிறுவனம் சிவில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் ஆட்சேர்ப்பு சேவைகள் என்ற பெயரில் அஷ்னீர் குரோவர், பாரத்பே நிறுவனத்தின் பணத்தை தனது குடும்பத்துக்கு மாற்றியுள்ளார் என்று செபியில் பதிவு செய்யப்பட்ட போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவை வழங்கும் நிறுவனமான கேப்பிடல்மைண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபக் ஷெனாய் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸில், ஆட்சேர்ப்பு சேவைகள் என்ற பெயரில் அஷ்னீர் குரோவர், நிறுவனத்தில் இருந்து பணத்தை முறைகேடாக தனது குடும்பத்துக்கு மாற்றியுள்ளார். ஆட்சேர்ப்பு சேவைகள் என்பது நிறுவனங்கள் பணத்தை எடுப்பதற்கான நன்கு அறியப்பட்ட வழிமுறையாகும்.
அப்போது இல்லாத வங்கி கணக்குகளை கொண்ட இன்வாய்ஸ்களை அவர்கள் பின்தேதியிட்டு இதனை முட்டாள்தனமாக செய்தனர். அஷ்னீர் குரோவர் அல்லது அவரது மனைவிக்கு சொந்தமான அல்லது இணைக்கப்பட்ட போலி நிறுவனங்களுக்கு ரூ.53 கோடிக்கு மேல் செலுத்தப்பட்டதாக அப்போதைய செய்திகள் கூறுகின்றன.
கோடிக் கணக்கில் பணம் பெற்று உள்ளபோதிலும், இந்த நிறுவனங்கள் ஜி.எஸ்.டி.யை கூட தாக்கல் செய்யவில்லை, இது முழு நிறுவனத்தையும் வீழ்த்தியது. ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், குறைந்தபட்சம் ஆட்சேர்ப்பு தொடர்பான பேமெண்ட்ஸ் மற்றும் நிறுவனர்களுக்கான இணைப்புகள் பற்றி வருடாந்திர சுய மதிப்பீட்டை செய்வோம் என்ற ஒரு கொள்கையையாவது வைத்துள்ளார்களா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று பதிவு செய்து இருந்தார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications