டெல்லி: இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு காலத்தில் ஓய்வூதியம் கிடைத்துவிடுகிறது, தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் பிஎஃப் மூலம் மாதாந்திர ஓய்வூதிய தொகை உறுதி செய்யப்படுகிறது. ஆனால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் என்பது கேள்விக்குறியாக இருந்தது.
இந்நிலையில் குறைந்த வருமானம் கொண்டவர்களும் தங்கள் ஓய்வு காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ளும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த ஒரு திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தியாவில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்திற்காக பதிவு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை 7.65 கோடிகளாக உயர்ந்திருக்கிறது.

குறைந்த வருமானம் கொண்ட நபர்களுக்கும் பாதுகாப்பான ஓய்வு காலத்தை உறுதி செய்வதற்காகவும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காகவும் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா. கடந்த 2015 ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் மாதத்தோறும் 1000 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் இணைந்தவர்கள் 60 வயது ஆகும்போது தாங்கள் செய்த பங்களிப்புக்கு ஏற்ப தங்களுடைய மாதாந்திர ஓய்வூதிய தொகையை பெற தொடங்குவார்கள். மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய கட்டமைப்பின் கீழ் ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை கண்காணிக்கிறது.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணையக்கூடிய சந்தாதாரர்கள் மாதாந்திர ,காலாண்டு ,அரையாண்டு ஆகிய முறையில் தங்களுடைய ஓய்வூதிய காலத்திற்கான தொகையை பங்களிப்பாக செய்ய முடியும். இந்த திட்டத்தில் குறிப்பிட தகுந்த வகையில் பெண்களின் பங்களிப்பு தான் அதிகமாக இருக்கிறதாம். தற்போது இந்த திட்டத்தில் சந்தாதாரர்களாக இணைந்திருக்கும் 7.65 கோடி பேரில் 48% பேர் பெண்கள் தான்.
கடந்த நிதியாண்டில் புதிதாக இந்த திட்டத்தில் இணைந்தவர்களில் 55% பேர் பெண்கள் என அரசு வெளியிட்டுள்ள தரவுகள் குறிப்பிடுகின்றன. பெண்கள் மத்தியில் ஓய்வுகாலம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. இந்தியாவில் 18 வயதில் இருந்து 40 வயதிற்கு உட்பட்டவர்கள் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் இணையலாம்.
இதில் குறைந்தது 20 ஆண்டுகளாவது பங்களிப்பு செய்ய வேண்டும். உதாரணமாக 29 வயதாக கூடிய ஒரு நபர் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைகிறார். மாதந்தோறும் 1, 000 ரூபாயை ஓய்வூதியமாக பெற வேண்டுமென அவர் விரும்பினால் அடுத்த 31 ஆண்டுகளுக்கு மாதம் 106 ரூபாய் செலுத்த வேண்டும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications