டாடா குழுமத்தின் ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), சமீபத்தில் அதன் புதிய கொள்கைகள் மற்றும் சம்பள உயர்வுகள் குறித்த புதுப்பிப்புகளை அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாக திகழும் டிசிஸ் அதன் ஊழியர்களுக்கு வரும் மார்ச் 2025 இல் அதன் வருடாந்திர சம்பள உயர்வுகளை வெளியிடுகிறது. இது வரும் ஏப்ரல் மாதம் முதல் ஊழியர்களுக்கு கிடைக்கும்.
இதற்கிடையில், கடந்த வார வர்த்தகத்தில், டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு ரூ.53,185.89 கோடி குறைந்து ரூ.13.7 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், டிசிஎஸ் பெரும் அடியைச் சந்தித்தது. இது ஊழியர்களுக்கு மோசமான செய்தியை அளித்துள்ளது. இது, கடந்த வாரம் முதல் 10 அதிக மதிப்புள்ள எட்டு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீடு ரூ.1,65,784.9 கோடியாகக் குறைந்ததில் ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய இழப்பாகும். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்குப் பிறகு இரண்டாவது அதிக மதிப்புமிக்க நிறுவனமாக டாடா குழும டிசிஎஸ் உள்ளது.

பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கமான போக்குகளுக்கு ஏற்ப டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மிகப்பெரிய சரிவை பெற்றது. அதே நேரத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனமும் பெரிய சரிவைச் சந்தித்தது. அதன் சந்தை மூலதனம் ரூ.44,407.77 கோடி குறைந்து ரூ.9.3 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வாரம் மட்டும், மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 628.15 புள்ளிகள் சரிந்தது. அதே நேரத்தில் தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 133.35 புள்ளிகள் சரிந்தது.
இதற்கிடையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாகத் தொடர்கிறது. அதைத் தொடர்ந்து டிசிஎஸ், எச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் ஐடிசி ஆகியவை அடுத்தடுத்து உள்ளன.
சென்ற வாரம் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் மட்டும் 5 நாட்களில் (பிப்ரவரி 17-21) 2.82 சதவீதம் சரிந்ததால், இந்த வாரம் அதன் சந்தை மூலதனம் ரூ.53,185.89 கோடியாக குறைந்ததால், நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் ரூ.13,69,717.48 கோடியாக உள்ளது.
மேலும், டிசிஎஸ் உட்பட முதல் 10 மதிப்புமிக்க எட்டு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீடு ரூ.1,65,784.9 கோடியை இழந்தது. இதற்கு மாறாக, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மூலதனம் ரூ.14,547.3 கோடி உயர்ந்து ரூ.16,61,369.42 கோடியாக உயர்ந்தது.
டிசிஎஸ் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதன் ரிட்டர்ன்-டு-ஆஃபீஸ் (RTO) கொள்கைக்கு இணங்க டிசிஎஸ் சம்பள உயர்வு மற்றும் வேரியபிள் பே இணைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், டிசிஎஸ் பங்கு விலை கடந்த பிப்ரவரி 21 கடந்த வர்த்தகத்தில் 0.28% சிறிய ஏற்றத்துடன் ரூ.3,789.90 என்ற அளவில் நிறைவடைந்தது. டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பீட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு, பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கத்தின் காரணமாக, சந்தை மூலதனத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மறுபுறம், இன்ஃபோசிஸ் அதன் சந்தை மதிப்பீட்டில் இருந்து ரூ.17,086.61 கோடியை இழந்து ரூ.7,53,700.15 கோடியாக உள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications