இந்திய வங்கித்துறை பல பிரிவுகளில் வேகமாக வளர்ச்சி அடைவது மட்டும் அல்லாமல் நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும், அனைத்து பகுதிகளில் இருக்கும் மக்களுக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்பதை முக்கிய இலக்காக கொண்டு உள்ளது இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய நிதியமைச்சகமும்.
இதன் அடிப்படையில் பல டிஜிட்டல் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால் நாட்டின் பொருளாதாரம், வர்த்தக வளர்ச்சிக்கு எளிய நிதி பரிமாற்ற சேவைகள் பெரிய அளவில் பலன் கொடுத்துள்ளது. ஆனால் இதேவேளையில் வங்கித்துறையில் மோசடிகளும் அதிகரித்துள்ளது என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. வங்கித்துறையில் மோசடி குறித்து தகவலை ஆர்பிஐ தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தனது வருடாந்திர அறிக்கையில் இந்திய வங்கித்துறையில் 2022-23 ஆம் நிதியாண்டில் பதிவான மோசடிகள் அதாவது ப்ராடு சம்பவங்கள் மட்டும் 13,530. இது கடந்த ஆண்டு எண்ணிக்கையை காட்டிலும் மிகவும் அதிகம் என்றாலும், ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் மோசடியில் பாதிக்கப்பட்ட தொகையின் அளவு பாதியாக குறைந்து 30,252 கோடி ரூபாயாக உள்ளது.
2022-23 ஆம் ஆண்டு பதிவான மோசடிகளில் பெரும்பாலானவை டிஜிட்டல் பேமெண்ட் சார்ந்து உள்ளது முக்கியமான தகவல், இதில் கார்டு மற்றும் இண்டர்நெட் வாயிலாக செய்யப்படும் பேமெண்ட்கள் அடக்கம். இதேபோல் அதிக தொகை இழப்பு கடன் பிரிவில் பதிவாகியுள்ளது.
2021-22 ஆம் நிதியாண்டில் 9097 மோசடிகளும், 59,819 கோடி ரூபாய் அளவிலான தொகையும் பாதிக்கப்பட்டது. இதேபோல் 2020-21 ஆம் நிதியாண்டில் 7338 மோசடிகளில் 1,31,389 கோடி ரூபாய் பாதிக்கப்ட்டது. 2022-23 ஆம் நிதியாண்டில் 13,530 மோசடிகளில் 30,252 கோடி ரூபாய் மதிப்பிலான தொகை பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 3 வருடம் வங்கித்துறையில் நடந்த மோசடிகளை ஆய்வு செய்து பார்த்த ஆர்பிஐ, தனியார் வங்கிகளில் அதிக எண்ணிக்கையிலான மோசடியும், பொதுத்துறை வங்கிகளில் அதிகப்படியான தொகை மோசடி மூலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலை 2022-23 ஆம் நிதியாண்டிலும் தொடர்கிறது என்பது தான் முக்கியமான விஷயம்.
இதனால் வங்கி சேவைகளை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக செயல்படுங்கள், உங்களின் பாஸ்வோர்டு, ஓடிபி, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு-ன் நம்பர், CVV எண், பின் நம்பர் போன்ற எந்த தகவலையும் மூன்றாம் நபரிடம் தெரியப்படுத்த வேண்டாம். மொபைல் போனில் இந்த ஆஃபர், அந்த ஆஃபர், பரிசு விழுந்துள்ளது என வாட்ஸ்அப், பேஸ்புக், மெசேஜ் வாயிலாக லிங்க் எதேனும் வந்தால் தப்பித்தவறி கூட தொட்டுவிட வேண்டும்.
இதைவிட முக்கியமாக வீட்டில் இருந்து பணியாற்றினால் மாதம் 50000, தினமும் 1000 ரூபாய், 3 மணி நேரத்திற்கு 1000 ரூபாய் என வேலைவாய்ப்பு குறித்து விளம்பரம் வந்தால் கூடுதல் உஷாராக இருங்கள். தற்போது இதுதான் முக்கிய மோசடி விஷயமாக மாறியுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications