இந்திய வங்கிகள் 2021-22ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் சுமார் 46,382 கோடி ரூபாய் அளவிலான கடனை தனது கணக்கில் ஒத்திவைத்துள்ளது (Write off) என லோக்சபாவில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடனை ஒத்திவைப்பு, கடனை தள்ளுபடி
கடனை ஒத்திவைப்பதிற்கும், கடனை தள்ளுபடி செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. கடனை தள்ளுபடி செய்வது எனில் கடன் வாங்கியவர் கடனை திருப்பி செலுத்த தேவையில்லை, கடனை ஒத்திவைப்பது என்பது வருடாந்திர நிலை கணக்கில் இருந்து தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றுவது தான் இந்த கடன் ஒத்திவைப்பு. இதை வங்கிகள் தனிப்பட்ட முறையில் நிர்வாகம் செய்து கடனை வசூலிக்கும்.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் அடிப்படையிலும், வங்கி நிர்வாகங்கள் ஒப்புதல் அளித்த கொள்கையின் அடிப்படையிலும், 4 வருடங்களுக்கு பின் வாராக் கடனை வங்கி நிதியியல் கணக்கில் இருந்து தனிப்பட்ட கணக்கில் மாற்றப்பட்டு உள்ளது.
பகவத் கரட்
இதுக்குறித்து மத்திய நிதியமைச்சகத்தின் பகவத் கரட் எழுத்துப்பூர்வமாக கொடுத்த பதிலில் வங்கிகள் வரி சலுகை மற்றும் மூலதனத்தை சிறப்பாக பயன்படுத்த தங்களது இருப்புநிலை அறிக்கையை மேம்படுத்தும் பொருட்டு இந்த கடன் ஒத்திவைப்பு பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
46,382 கோடி ரூபாய் கடன்
இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் அடிப்படையில் இந்தியாவில் இருக்கும் வர்த்தக வங்கிகள் 2021-22ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் 46,382 கோடி ரூபாய் அளவிலான கடனை ஒத்திவைத்துள்ளது.
திருப்பி செலுத்த வேண்டும்
மேலும் ஒத்திவைக்கப்பட்டு உள்ள கடனை, கடன் பெற்றவர்கள் கட்டாயம் திரும்ப செலுத்த வேண்டும், அதற்கான பணிகளை வங்கி நிர்வாகம் எடுக்கும் என மத்திய நிதியமைச்சகத்தின் பகவத் கரட் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications