பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் குடி தண்ணீர் கிடைக்காமலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கி இருப்பவர்கள் லாரிகளில் தண்ணீர் கிடைக்காமலும் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் குடிநீரை வீணாக்குபவர்களுக்கு பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து வருகிறது.
காவிரி தண்ணீரை கார் கழுவுவது , தோட்டங்களுக்கு விடுவது போன்றவற்றுக்கு பயன்படுத்தியதாக 22 குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

பெங்களூரு நீர் வழங்கல் வாரியம் கிட்டதட்ட ரூ.1.10 லட்சத்தை அபராதமாக வசூலித்துள்ளது என டெக்கன் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலையில் சிலர் கார்களை சுத்தப்படுத்துவதற்கும், செடிகளுக்கு ஊற்றுவதற்கும் , கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தி வருவதாக பெங்களூரு நீர் வழங்கல் வாரியத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன.
குறிப்பாக மாநகரின் தெற்கு மண்டலத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் தண்ணீரை வீணாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
தண்ணீர் பிரச்னை நிலவுவதால் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களில் தண்ணீரை பீய்ச்சி அடிப்பது போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.முன்னதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பெங்களூருவில் ஒரு நாளைக்கு 2,600 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில் தற்போது 500 மில்லியன் லிட்டர் தண்ணீருக்கு தட்டுப்பாடு இருந்து வருவதாகவும், மக்களின் அன்றாட தண்ணீர் தேவைகளை குறிப்பாக குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தனது அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூருக்கு ஒரு நாளைக்கு தேவையான நீரில் காவிரி நதியிலிருந்து 1470 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைப்பதாகவும் போர்வெல்களில் இருந்து 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைப்பதாகவும் கூறியுள்ளார். பெங்களூருவில் உள்ள 14,000 போர்வெல்களில் 690 போர்வெல்கள் வற்றி விட்டன. அதுமட்டுமின்றி நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு நிலவி பெங்களூருவில் மக்கள் காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாகனங்களை கழுவுவது, கட்டுமானம் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக குடிநீரை பயன்படுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என பெங்களூரு நீர் வழங்கல் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications