பெங்களூரு PG-யில் அட்டூழியம்! இனி வாடகையை பணமாக தான் கொடுக்கணுமாம்.. புது கண்டிஷன்..!!

பெங்களூரு: இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமாகவும் ஐடி நகரமாகவும் பெங்களூரு திகழ்கிறது. வேலை நிமித்தமாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்கள் பெங்களூருவில் தங்குகின்றனர். இவர்களுக்கு பிஜி எனப்படும் தங்கும் விடுதிகள் சௌகரியமாக இருக்கின்றன. இப்படி பிஜி-க்களில் தங்கி இருப்பவர்களுக்கு புதிய பிரச்சினை எழுந்துள்ளது.

பெங்களூருவில் ஏராளமான ஐடி நிறுவனங்களும் ஜிசிசி மையங்களும் செயல்படுகின்றன. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களும் லட்சக்கணக்கில் பெங்களூருவில் தங்கி இருந்து வேலைக்கு செல்கின்றனர். இவ்வாறு வரக்கூடிய வெளிமாநில இளைஞர்களுக்கும் பிஜிக்கள் தான் முக்கியமான தங்குமிடங்களாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது பெங்களுருவை சேர்ந்த பிஜி உரிமையாளர்கள் ஆன்லைன் முறையில் வாடகை செலுத்தினால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் ரொக்கமாக மட்டுமே பணம் செலுத்த வேண்டும் எனக் கூறுகிறார்களாம்.

பெங்களூரு PG-யில் அட்டூழியம்! இனி வாடகையை பணமாக தான் கொடுக்கணுமாம்.. புது கண்டிஷன்..!!

யுபிஐ பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் பெரும்பாலானவர்கள் பணத்தை கையில் எடுத்து பயன்படுத்துவதே கிடையாது. ஆனால் பெங்களூரு பிஜி உரிமையாளர்கள் ரொக்கமாகவே வாடகை வழங்க வேண்டும், ஒருவேளை ஆன்லைனில் பணம் செலுத்துகிறீர்கள் என்றால் அதற்கு நீங்கள் 12 சதவீதம் ஜிஎஸ்டியும் சேர்த்து செலுத்த வேண்டும் என கூறுகிறார்களாம் .

ரெடிடி தளத்தில் ஒரு இளைஞர் வெளியிட்டுள்ள பதிவில் பெங்களூரில் செயல்படும் ஒரு பிஜி-இல் இவ்வாறு ஒரு நோட்டீஸ் ஓட்டப்பட்டு இருப்பதை நான் பார்த்தேன் என குறிப்பிட்டு இருக்கிறார். அந்த நோட்டீஸில் இங்கே தங்கி இருப்பவர்கள் அதற்கான வாடகையை ரொக்கமாக மட்டுமே வழங்க வேண்டும் ஆன்லைன் வாயிலாக செலுத்தினால் அதற்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பெங்களூரு PG-யில் அட்டூழியம்! இனி வாடகையை பணமாக தான் கொடுக்கணுமாம்.. புது கண்டிஷன்..!!

ரெடிட் தளத்தில் வெளியான இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பெங்களூருவில் பிஜி நடத்தி வரும் உரிமையாளர்களை கடுமையாக சாடி வருகின்றனர் . ஒரு சிலர் இந்த பிஜியில் தங்கி இருக்கக்கூடியவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர் . ஒரு சிலர் இதுபோன்ற நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கின்றனர் .

அரசுக்கு வரி செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்காகவே இது போன்ற வேலைகளை பிஜி நடத்துபவர்கள் செய்கின்றனர் என குற்றம்சாட்டுகின்றனர். இந்தியாவில் சம்பளதாரர்களை தவிர மற்ற அனைவருமே வரி செலுத்தாமல் தப்பிப்பதற்கு வழி வைத்திருக்கின்றனர் என ஒரு நபர் சாடி இருக்கிறார். ஒரு நபர் இவ்வாறு நீங்கள் செய்தால் அந்த நபர் வரி செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்கு தான் உதவுகிறீர்கள் எனவே அவரிடம் ஆன்லைனில் வாடகை செலுத்தி விட்டு அதற்கான ஜிஎஸ்டி ரசீதை கேளுங்கள் என அறிவுரை வழங்கி இருக்கிறார்.

ஆன்லைனில் பணம் செலுத்தினால் 12% ஜிஎஸ்டி என்றால் நிச்சயம் பணத்தை மிச்சப்படுத்த பலரும் ரொக்கமாக தான் வாடகையை செலுத்துவார்கள். இதன் மூலம் பிஜி நடத்துபவர்கள் அரசுக்கு தங்கள் வருமானத்தை குறைத்து காட்டும் வாய்ப்பு கிடைக்கிறது ஒரு நபர் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+