புதிய ஃபோனை வீட்டிற்கு அனுப்பிய கும்பல்.. தெரியாமல் பயன்படுத்திய நபர்! ரூ.2.8 கோடியை இழந்த சோகம்!

பெங்களூரைச் சேர்ந்த டெக்கி என்பவர் புதுவகையான மோசடியில் சிக்கி ரூ. 2.8 கோடியை இழந்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் வங்கி விவரங்களை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகி, கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் மோசடி செய்தவர்கள் அபகரித்துள்ளனர். இந்த சம்பவம் எப்படி நடந்தது? என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

சில ஸ்கேம் செய்திகள் குறித்து நாம் அவ்வப்போது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் பயன்படுத்தும் யுக்தி என்னவென்று தெரியவரும். சிலர் தங்களுக்கே தெரியாமல் மோசடி செய்பவர்களின் வலையில் விழுகின்றனர். அதுவே முன்கூட்டியே அவர்கள் பயன்படுத்தும் யுக்திகளை தெரிந்து வைத்திருந்தால்.. நிதி இழப்புகளைத் தடுக்கலாம்.

 புதிய ஃபோனை வீட்டிற்கு அனுப்பிய கும்பல்.. தெரியாமல் பயன்படுத்திய நபர்! ரூ.2.8 கோடியை இழந்த சோகம்!

இந்தச் சம்பவத்தில் மோசடிக்காரர்கள் ஒரு புதுமையான யுக்தியை பயன்படுத்தியுள்ளனர். சிட்டி பேங்கின் ஊழியர் எனக் கூறிக்கொண்டு ஒருவரிடமிருந்து பாதிக்கப்பட்டவருக்கு வாட்ஸ் அப் அழைப்பு வந்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் கிரெடிட் கார்டு ஒப்புதல் நிலுவையில் இருப்பதாக அழைப்பு விடுத்தவர் தெரிவித்திருக்கிறார். எனவே உடனடியாக ஒரு புதிய சிம் கார்டை வாங்குமாறும் அறிவுறுத்தினார்.

சில நாட்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவருக்கு சிட்டி யூனியன் வங்கியிலிருந்து ஒரு மொபைல் போன் அடங்கிய பார்சல் கிடைத்துள்ளது. மோசடியை அறியாமல் பாதிக்கப்பட்டவர் புதிய சிம் கார்டை மொபைலில் சொருகி பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். அந்த மொபைல் போனில் ஏற்கனவே தீங்கிழைக்கும் அப்ளிகேஷன்கள் டவுன்லோட் செய்யப்பட்டிருந்தது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு கிடைத்த OTP தகவல்கள் அனைத்தும் மோசடிக்காரர்களுக்கும் அனுப்பப்பட்டது. இதைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரின் பிக்சட் டெபாசிட்களில் இருந்த தொகை உட்பட 2.8 கோடி ரூபாயை வங்கி கணக்கில் இருந்தது அபகரித்தனர்.

இதற்கு முன்னர் ஸ்கைப், வாட்ஸ் அப், டெலிகிராம் போன்றவற்றை வைத்து மோசடி செய்து வந்த கும்பல் தற்போது புதிதாக மொபைல் ஃபோன்களையும் வழங்கி மோசடி செய்து வருகின்றனர். OTP மற்றும் மெசேஜ் போன்றவற்றைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவருக்கு தெரியாமல் வங்கி கணக்குகளை பயன்படுத்துகின்றனர்.

தற்போது பாதிக்கப்பட்டவர் ஒயிட்ஃபீல்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் ஐடி சட்டத்தின் பிரிவுகளின் கீழ் விசாரணையை தொடங்கியுள்ளனர். புகார் அளித்தவரின் கூற்றுப்படி, 2024-ஆம் ஆண்டின் நவம்பர் 27-ஆம் தேதி அன்று சிட்டி பேங்கில் ஊழியர் எனக் கூறிக்கொண்டு ஒருவரிடமிருந்து வாட்ஸ் அப் அழைப்பு வந்துள்ளது.

டிசம்பர் 1-ஆம் தேதி அன்று சிட்டி யூனியன் பேங்கில் இருந்து ஒரு கொரியர் வந்தது. அதில் MI 13 C பிராண்டின் மொபைல் போன் இருந்தது. புதிய சிம் கார்டை இந்த சாதனத்தில் தான் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்தியுள்ளார். அதன்பின் டிசம்பர் 5, 2024 அன்று வங்கிக்கு சென்று தெளிவு படுத்தியபோது புகார்தாரரின் 2 கணக்குகளில் இருந்து ரூ. 2.8 கோடி மோசடியாக பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+