தந்தை நண்பர் என்று போனில் பேசிய மோசடி நபர்.. கண் முன்பே ரூ.1 லட்சத்தை இழந்த பெங்களூரு பெண்மணி

தொழில்நுட்ப புரட்சியால் வங்கி சேவைகள் டிஜிட்டல் மயமாகி விட்டது. இதனால் ஒருவருக்கு பணம் அனுப்புவது போன்ற பண பரிவர்த்தனைகள் மிகவும் எளிமையாகி விட்டது. அதேசமயம் சைபர் கிரைம் மோசடிகளும் அதிகரித்து வருகிறது.

OTP இல்லாமலே வங்கி கணக்கில் இருந்து சைபர் கிரைம் மோசடியாளர்கள் லட்சக்கணக்கில் பணத்தை திருடும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அண்மையில் பெங்களூருவை சேர்ந்த பெண்மணி ஒருவர் சைபர் கிரைம் மோசடி நபரிடம் ரூ.1 லட்சம் இழந்துள்ளார்.

தந்தை நண்பர் என்று போனில் பேசிய  மோசடி நபர்.. கண் முன்பே ரூ.1 லட்சத்தை இழந்த பெங்களூரு பெண்மணி

பெங்களூரு நகரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹெப்பல் பகுதியில் வசிப்பவர் 43 வயதான ஆசிரியராக பணியாற்றும் பெண்மணி. அண்மையில் அந்த பெண்மணி, ஒரு ஆணிடம் ரூ.1 லட்சத்தை இழந்துள்ளார், மோசடி நபர் அந்த பெண்ணின் தந்தை நண்பர் என்று கூறி, அவரது டிஜிட்டல் வாலட்டுக்கு பணம் அனுப்புவதாக கூறி அந்த பெண்ணின் கணக்கில் இருந்து அந்த பணத்தை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி கூறுகையில், நான் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது தெரியாத எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் அதை எடுத்து பேசியபோது, என்னை அழைத்த நபர் இந்தியில் பேசினார்.

எனது தந்தையின் நண்பரான சார்ட்டட் அக்கவுண்ட் போல் ஆள்மாறாட்டம் செய்து பேசினார். எனது தந்தை என் வங்கி கணக்குக்கு கொஞ்சம் பணம் அனுப்ப சொன்னார் என்று என் UPI ஐ.டி.யை கேட்டார். நானும் அதனை நம்பி கொடுத்தேன். இதனையடுத்து அவர் ஒரு சாதாரண செய்தியை போன்பே-ல் அனுப்பினார்.

மேலும் பணம் எனது கணக்கு அனுப்பப்பட்டு விட்டதாக தெரிவித்தார். மேலும் நான் சொல்வதை செய்யும்படி சில அறிவுறுத்தல்களை வழங்கினார். நான் அதனை செய்தபோது என் கணக்கில் இருந்து இரு முறை ரூ.25,000, ஒரு முறை ரூ.50,000 என மொத்தம் ரூ.1 லட்சம் கழிந்தது. இவை அனைத்தும் OTPகள் இல்லாமல் கழிக்கப்பட்டது.

இதனையடுத்து நடந்த சம்பவத்தை எனது தந்தையிடம் தெரிவித்தேன். மோசடி வலையில் நான் சிக்கியதை அறிந்து என் மீது கோபப்பட்டார். நான் ஏன் யாரிடமாவது உனக்கு பணம் அனுப்ப சொல்ல போகிறேன் என்று கோபமாக தெரிவித்தார்.

நான் சைபர் க்ரைம் உதவி எண்ணை அழைத்தேன். ஆனால் அந்த பணியாளருக்கு ஆங்கிலம் அல்லது இந்தி புரியவில்லை. இதனையடுத்து புகார் கொடுத்து அந்த நபரின் கணக்கை முடக்க வேண்டும் என்பதற்காக பணத்தை இழந்த ஒரு மணி நேரத்துக்குள் அந்த பகுதி காவல் நிலையத்துக்கு சென்றேன்.

ஆனால் காவல் நிலைய அதிகாரிகள் புகார் பதிவு செய்வதை தாமதப்படுத்தி, முதல்வர் மற்றும் கவர்னரின் பாதுகாப்பு பணியில் மும்முரமாக இருப்பதாக கூறினர். சில முதல்வர்கள் அல்லது கவர்னர்கள் வருகிறார்கள் என்றால், அவர்கள் (போலீசார்) சாமானியர்களை கவனிக்க மாட்டார்கள் என்று அர்த்தமா.

குற்றவாளியின் கணக்கை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் அவர்களிடம் தொடர்ந்து கூறினோம். ஆனால் அவர்கள் தாமதித்தனர் என்று தெரிவித்தார். போலீஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று அந்த பெண்ணை அழைத்து அந்த குற்றவாளியின் கணக்கை முடக்க வங்கிக்கு இமெயில் அனுப்புவதாக தெரிவித்தனர்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+